பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பிஞ்சு இதயத்துக்கு மறு உயிர் கொடுக்க முடியும்

உறவில் திருமணம், கர்ப்ப காலத்தில் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவைத் தாய் சாப்பிடாமல் இருத்தல், கருவுற்றிருக்கும்போது, முதல் 3 மாதங்களில், அம்மை போன்ற வைரஸ் நோய்களால் பாதிக்கப்படுதல். சில ஒவ்வாத மாத்திரைகள், தாய்க்கு இதயக் கோளாறுகள் இருத்தல், ஆகியவை காரணமாக, இதய நோய்களுடன் குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் உண்டு.

கருவில் 4-வது மாதத்திலேயே குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருந்தால், ஓரளவு தெரிந்து விடும். அல்ட்ரா சவுண்ட் கருவி மூலம் கருவைப் பரிசோதனை செய்து, கோளாறுகளை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ள முடியும்.

குழந்தைகளுக்குப் பிறப்பிலேயே ஏற்படும் இதய நோய்கள் ஆபத்தானவை. இதயத்தில் ஓட்டை, வால்வுகள் பழுதாக இருத்தல், ரத்தக் குழாய்கள் சுருங்கி இருத்தல்,