பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

பாப்பா முதல் பாட்டி வரை

குறைவாக இருந்தால், இதய நோய்கள் வருதவற்கு வாய்ப்பு உண்டு. அடிக்கடி சளி பிடித்தல், வறட்டு இருமல், தொண்டை எரிச்சல், மூட்டு வலியுடன் கூடிய காய்ச்சல் (Rheumatic Fever) ஆகியவை காரணமாக, ஓரிரண்டு ஆண்டுகள் கழித்து, இதய வால்வுகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. இதனால் குழந்தைக்கு அடிக்கடி மூச்சு முட்டும்.

குழந்தைக்குச் சிரங்கு வந்தால், பெற்றோர் அலட்சியமாக இருக்கக்கூடாது. சீழ் பிடிக்கும் அளவுக்குச் சிரங்கு மோசமான நிலைக்குச் சென்றால், அதன் காரணமாக இதய வால்விலும் சீழ் பிடிக்கும் நிலை ஏற்படலாம். அறுவைசிகிச்சை செய்து பழுதடைந்த வால்வுகளுக்குப் பதிலாகப் புதிய செயற்கை வால்வுகளைப் பொருத்தித் தான் குணப்படுத்த முடியும். ஒரு வால்வின் விலை ரூ.28 ஆயிரம் முதல் ரூ.52 ஆயிரம் வரை.

இதய உரை : பிறப்பிலேயே இதயத்தைச் சுற்றிக் கவசம்போல் ஒரு உறை இருக்கும். இதயத்துக்கும் இந்த உறைக்கும் இடையில், சீழ் உண்டானால், உயிருக்கு ஆபத்து. இதுபோன்று சீழ் உண்டாகும் நிலையில் அவசர அறுவைசிக்சை செய்து, உரையை நீக்கிவிடுவதே நல்லது. ஏனெனில், சீழின் அழுத்தம் காரணமாக, இதயம் சுருங்கி விரிவது நின்றுபோய், உயிருக்கு ஆபத்து ஏற்படும். இந் நோய்க்கு ‘பையோபெரியார்டியம்’ (pyopercardium) என்று பெயர். குழந்தைகளுக்குத் தோல் நோய்கள் வந்தால், பெற்றோர் அலட்சியமாக இருக்கக்கூடாது.

இதயமாற்று அறுவைசிகிச்சை: அம்மை போன்ற வைரஸ் நோய்கள் காரணமாக, சில குழந்தைகளின் இதயத்தசை பலவீனமடைந்து விடலாம். பலவீனமடைந்தால் இதயத் தசைகள் தளர்ந்து விடும். இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும். சீராக இருக்காது. இதய மாற்று அறுவை சிகிச்சையே இதற்குத்