பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

189

இதன் காரணமாகவும் முதுகு வலி வருகிறது. இவ்வாறு முதுகு வலியினால் பாதிக்கப்படுவோர், எந்த உணவு உட்கொண்டால் வலி வருகிறது என்பதை உணர்ந்து, அதைத் தவிர்த்து விட்டால் குணமடையலாம்.

Rheumatsm என்ற சரவாங்கி மிகக் கொடிய நோய். ஒவ்வாமையல் தான் இது வருகிறது என்று கருதப்படுகிறது. மாமிசம், முட்டை, மீன் போன்ற உணவு வகைகள், ஒரு சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல், வலி வரலாம். மது அருந்தினாலும், ஒவ்வாமை ஏற்படும், முதுகு வலி ஏற்படும்.

இவ்வாறு முதுகு வலி உள்ளவர்கள், காலையில் மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் தசைகளைத் தளர்ச்சியடைச் செய்ய வேண்டும். தனது உடல் நிலையை அறிந்து, அதற்கேற்ற உடற்பயிற்சி செய்தால், முதுகு வலியைப் பெரும்பாலும் தவிர்த்து விடலாம்

எலும்புமுறிவு சிகிச்சை: சாலை விபத்து, தொழிற்சாலை விபத்துகளால், எலும்பு முறிவு ஏற்படலாம். எலும்பு முறிவு, ரத்தக்காயம் இல்லாமல் இருக்குமானால், அதில் ஆபத்து இல்லை, ரத்தக் காயத்துடன் உள்ள எலும்பு முறிவுக்கு, மிக்க கவனத்துடன் மருத்துவம் செய்ய வேண்டும். ரத்தம் கசிந்தால், ரத்தம் வீணாவது மட்டுமின்றி, இத்தகைய எலும்பு முறிவால், மிகச்சுலபமாக நோய்க்கிருமிகள் பரவி, எலும்பில் சீழ் பிடிக்கலாம்.

எலும்பில் சீழ் பிடிக்காமல், இந்த எலும்பு முறிவுகளைக் குணப்படுத்த, மிக விரைவில் சிகிச்சை செய்யப்பட வேண்டும். ரத்தக்காயத்துடன் கூடிய, எலும்பு முறிவானால், சுமார் 5 மணி நேரத்துக்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.