பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

பாப்பா முதல் பாட்டி வரை

சிறு விளக்கை எரிப்பது நன்மையாகும். வயிறு நிறைய உணவு கொடுத்து உடனே தூங்கச் செய்யாது, சிறிது நேரம் விளையாட்டுக் காட்டி, உணவு சீரணமடையத் துவங்கிய பின்பு தூங்கச் செய்வது நன்மை பயக்கும்.

பற்களைக் கடித்தல் : தூக்கத்தில் பற்களைக் கடிப்பதும் உண்டு. இதற்கு அசீரணம், குடல் பூச்சிகள் முதலியவை காரணம். சிகிச்சை அங்கங்கே விவரிக்கப்பட்டுள்ளது.

படுக்கையில் சிறுநீர்ப் போக்கு : சிறுநீர்ப் பைக்குத் தன்னுள் சிறுநீரை அடக்கி வைத்துக்கொண்டு, இச்சை ஏற்படும் பொழுது மட்டும் கழிக்கும் தனித்திறமை, குழந்தைக்கு மூன்று வயதிற்குமேல், அநேகமாக இந்தச் சக்தி, எல்லாக் குழந்தைகளுக்கும் ஏற்பட்டு விடுவதினால், நினைத்த பொழுது சிறுநீரைக் கண்ட இடமெல்லாம் கழிக்காது கட்டுப்படுத்தும் சக்தி ஏற்பட்டு விடுகின்றது. ஆனால், சில குழந்தைகளுக்கு சிறுநீர்ப் பையைக் கட்டுப்படுத்த இயலுவதில்லை. இக் குழந்தைகள் இரவில் உறங்கும்போது சிறுநீர் கழித்துவிடும்.

காரணம் மூன்றுவகைப்பட்டது :1. (a) கீரைப்பூச்சி (Thread worm) குடலில் இருப்பது. இவை இரவு வேளையில் ஆசன வாயில் வந்து தங்கிக்கொண்டு அரிப்பை உண்டாக்குகின்றன. (b) தொண்டையிலும் மூக்கிலும் சதை வளர்ந்திருப்பது. (c) பெண் குழந்தைகள் மணலில் விளையாடிப் பெண் உறுப்பில் புண் ஏற்படுவது. ஆண் குழந்தைகளுக்கு ஆண் உறுப்பின் முன்தோல் (Peptice) சிறுநீர் துவாரத்தை மூடும் அளவு நீண்டு வளர்ந்திருப்பது. சிறுநீரில் அமிலம் அதிகமாக இருப்பது முதலியன. 2. சிறுநீர் பெய்யப் பயிற்சி அளியாதிருப்பது. 3. பயம், கோபம், வருத்தம், அதிர்ச்சி போன்றவை.