பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

பாப்பா முதல் பாட்டி வரை

குழந்தையின் தலை வீங்கி, பெரிதாக இருந்தால் மூளை வளர்ச்சி பாதிக்கும். இதை இறுதி மூன்று மாத காலத்தில் ஸ்கேன் எடுப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். கர்ப்பப் பையில் குழந்தையைச் சுற்றி நீர் குறைந்து விட்டால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து. இதை உடனடியாகத் தெரிந்து உரிய நடவடிக்கை எடுக்கலாம். கர்ப்பப் பையில் குழந்தை சரியான நிலையில் உள்ளதா? தலைகீழாக உள்ளதா? குறுக்குவாட்டில் உள்ளதா? என்று கண்டுபிடித்து, அதற்கேற்றாற்போல் உரிய நட வடிக்கைகளை எடுக்கலாம். குழந்தை குறுக்குவாட்டில் இருந்தால் பிரசவம் சிரமம். சிசேரியன் தேவையா என்பதை முன்கூட்டியே தீர்மானித்து விடலாம்.

நஞ்சு பிரிதல் : தாயையும், குழந்தையையும் இணைக்கும் நஞ்சுக் கொடி, கர்ப்பப் பையின் வாய்ப் பகுதிக்குச் சென்றுவிட்டால் குழந்தையை வெளியே வரவிடாமல் அடைத்துக் கொள்ளும். இதனால் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு, தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். குழந்தைக்குக் கீழே நஞ்சுக்கொடி வந்துவிட்டால், உதிரப்போக்கு மட்டுமே இருக்கும். வலி இருக்காது. நஞ்சுக் கொடி தனியாகப் பிரிந்து விட்டாலும், தாயின் உயிருக்கு ஆபத்து. நஞ்சுக்கொடி சரியான இடத்தில், சரியான நிலையில் உள்ளதா என்பதை முன்கூட்டியே அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து, சரியாக இல்லை என்றால் சிசேரியன் அறுவைசிகிச்சை மூலம் தாயையும் குழந்தை யையும் காப்பாற்றி விடலாம். எனவே உதிரப்போக்கு ஏற்பட்டால், உடனே டாக்டரை அணுகி உரிய சிச்சை பெறவேண்டும். ரத்த அழுத்தம் அதிகமாக உள்ள பெண்களுக்கு நஞ்சுக்கொடி பிரிய அதிகவாய்ப்புள்ளது.

கருக் குழந்தைகளுக்கு மார்க் இருக்கு : அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் சோதனையில் கருக் குழந்தையின் மூச்சு விடும்