பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

பாப்பா முதல் பாட்டி வரை

நஞ்சு விளங்குகிறது. இந்த நஞ்சு, பொதுவாக கர்ப்பப் பையின் மேல் பாகத்தில் ஒட்டியிருக்கும். கர்ப்பப் பைச் சுவரைச் சுற்றி ஒட்டினாற்போல் இருக்கும் இந்த நஞ்சு காரணமாக, பிரசவ நேரத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த நஞ்சு இடம் மாறி, கர்ப்பப் பை வாய் திறக்கும் அடிப்பகுதியில் ஒட்டியிருக்குமானால், பிரசவ வலி ஆரம்பிப்பதற்கு முன்பே, உதிரப் போக்கு அதிகமாக ஏற்படும். இந் நிலையில், தாயைக் காக்க சிசேரியன் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. சில சமயங்களில் நஞ்சு வளர்ச்சிப் பற்றாக்குறை காரணமாக, குழந்தைக்குச் செல்லும் ரத்த ஒட்டம் பாதிக்கப்பட்டு, சிசுவுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு மேலும், சிசுவின் மூளைக்கு, ஆக்சிஜன் செல்வதில் பற்றாக்குறை ஏற்பட்டு, பிறந்தவுட்டன் அறிவுத் திறன் குறைபாடு போன்ற பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உண்டு. இதுபோன்ற தருணங்களிலும் சிசேரியன் அறுவை சிகிச்சையே சிறந்தது. இதேபோன்று நஞ்சுக்கொடி நழுவுதல், பனிக்குடம் முன்கூட்டியே உடைதல், பிரசவ வலி வராமல் இருத்தல், ஆகிய சூழ்நிலைகளில் சிசேரியன் அவசியமாகிறது. சில சமயங்களில் கருக் குழந்தையின் கழுத்தை நஞ்சுக்கொடி சுற்றிக்கொண்டு அதற்கு திணறல் ஏற்படும் நிலையில் சிசேரியன் தேவைப்படும்.

மன இறுக்கம் கூடாது : பிரசவ நேரத்தில் கர்ப்பிணிகள் மன நிலை தளர்வாக இருப்பது அவசியம். அதிர்ச்சி, குடும்பப் பிரச்சினைகள், பேற்றைப் பற்றி அதிகக் கவலை ஆகியவற்றடன் கர்ப்பிணி இருந்தால், கர்ப்பப் பை வாய் திறக்காது. விளைவு, பிரசவம் தாமதமாகி, சிசேரியன் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டியிருக்கும்.

உயரம் 5 அடிக்குக் குறைவாக இருந்தால்: கர்ப்பிணியின் உயரம், 5 அடிக்குக் குறைவாகவும், குழந்தையின் தலை