பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{}{} பாரதிக்குப் பின் ஆழ்ந்த அனுபவத்திலும், அந்தரங்கத்திலும் மெளனமாகக் கொள்ளும் கூடமான பேரின்ப உணர்ச்சியை வளர்க்கச் சிற்பித்தவை தான கோவில்கள்? கொத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். அதன் பிரகாரத்தில் நடமாடும் பக்தர்களுக்கும் அவர்கள் நிழலுக்கும் வித்தியாசம் காணக் கூடாத திகைப்பைக் கொடுக்கும் அச்சந்நிதானம், எத்த உண்மையை உணர்த்த ஏற்பட்டது? நாம் சாயைகள் தாளு? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?-என்பன போன்ற பிரச்னை சளே என் மனம் எழுப்பிய போது, ஒருதரம் என் தேகம் முழுவதும் மயிர்க் கூச்செறிந்தது.” சூழ்நிலையையும் பாத்திர மனநிலையையும் பொருத்திக் காட்டும் இடங்களில் அருமையான சொற்கோலங்கள் பிறந்திருக்கின்றன மெளனியின் நடையில். ‘வெகு காலமாக, ஜோதி கொண்டு ஜொலிப்பது போன்று நிசப்தத்தில் தனிமையாக ஒரு பெரிய சுடர் விளக்கு மட்டும் விங்கத்தருகில் எரிந்து கொண்டிருக்கும். அது திடீரெனச் சிறிது மறைந்து பிறகு பழையபடியே அமைதியில் தெரிந்தது. யாரோ ஒரு பக்தன் கடவுளே வழி பட உள் சென்ருன் போலும். நான் மெதுவாகப் போய்க் கொண்டிருந்தேன். உலகின் கடைசி மனிதன் கடவுள் வழிபாட்டை முடித்துக் கொண்டு, அநந்தத்திலும் அவியாத ஒளியை உலகில் விட்டுச் சென்றது போலத் தோன்றியது அந்த மறைவும் தோற்றமும். தூண்டப் படாது அணய விருந்த என எரிந்த ஒளி திமிர்ந்து ஜொலிக் கத்தான் நேற்று இது நிகழ்ந்தது." சின்ன விஷயங்களைக் கூட நுட்பமாகச் சித்திரிக்கும் போக்கில் எழுத்து வளர்கிற போது, மெளனியின் எளிய நடை சிக்கல்கள் நிறைந்த நீள வாக்கியம் (காம்ப்ளெக்ஸ்