உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

‘தீபச் சுடர் சிறிது தூண்டி விடப்பட்டது; கோபமாகக் கடைசியில் எல்லாவற்றையும் பார்ப்பது போன்றே தான், நிமிர்ந்து ஜ்வலித்தது.’

‘அவள் நடை அழுத்தலாக அவளை முன் செலுத்தியது.’

‘காலடியினின்றும் மிக வெறுப்புற்றது போன்று பாதை நழுவி நகர்ந்தது.’

‘உலக இரைச்சலும் ஆரவாரிப்பும், ஆயிரம் வாயினின்றும் வெளிப்பட்டு அலறிக்குமைந்தன.’

‘மரக்கிளைகளில் பக்ஷிகள் ஆரவாரித்தன. உலக அலுப்பே, குழறி முனகுவது போன்று அவை இடைவிடாது சிறிது நேரம் கத்தின.’

‘இரவின் இருளைத் திரட்டி அடிவானத்தில் நெருப்பிட்டதே போன்று கிழக்கு புகைந்து, சிவந்து, தணல் கண்டது.’

‘காலடியும், ஒளி கொள்வது, இலேசுபடாது, புழுதிப் புகையைக் கண்டது.’

இந்த விதமான பிரயோகங்கள் மௌனியின் உரைநடைக்கு ஒரு அழகும் அழுத்தமும் தனித்தன்மையும் சேர்க்கின்றன. சோகமும் சோர்வும், விரக்தியும் அலுப்பும், வெறுப்பும் வறட்சியும், பயனின்மையும் தோல்வியும் அடி நாதங்களாக ஒலிக்கின்றன. கதைகள் அவற்றுக்கு ஏற்ற சொற் கோலங்களை உரைநடையாகக் கொண்டு பின்னப்பட்டுள்ளன.