பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24 பாரதிக்குப் பின் உயர்ந்த எண்ணத்தையும், தூய்மையையும், தோகையரின் மேன்மையையும் உணர்த்துமா, வாம மேகலை இறவளர்ந்த அல்குலே உடையவள் பிராட்டி என்று கூறிய கம்பரின் கவிதை முறை, இத்தகைய உயரிய எண்ணத்தைக் கிளப்புமா என்று கேட்கிறேன். புளித்த காடி தாகவிடாய் தீர்க்குமா, இளநீர் போக்குமா என்று கேட்கிறேன். புண்ணிலிருந்து (வடிவது) நாற்றமடிக்கும், பூவிலிருந்து மணம் வீசும்: புலமை என்ருல், புனிதமான எண்ணத்தைப் பக்குவமாகப் புகுத்த வேண்டுமேயொழிய, மேலிட் மறைவிட வர்ணனைக்குக் கருவியாக இருக்க வேண்டுமா என்றுதான் தான் கேட்கிறேன்.” (கம்பரசம்) அரசியல் உண்மைகளே அழுத்தமாகக் கூறுகிறபோது, சாதாரண மக்களும் இலகுவில் விளங்கிக் கொள்ளக்கூடிய விதத்தில் சர்வ சாதாரண விஷயங்களே உதாரணங்களாக அடுக்கி, உரிய கருத்தை நன்கு பதிய வைக்கும் திறன் அண்ணு துரையின் உரைநடையில் கலந்து மிளிர்கிறது. இதோ ஒரு பகுதி "மோட்டார் நன்முக ஒட, அதை ஒட்ட விசை இருந் தால் மாத்திரம் போதாது-அது தவருன வழியில் சென்ருல் தடுக்க பிரேக்கும் வேண்டும்! நாடு செழிக்க நல்ல ஆறு இருந்தால் மாத்திரம் போதாது-அதிலிருந்து வெள்ளம் புரண்டு ஊரை அழித்து விடாமல் இருக்கக் கரைவேண்டும்: நல்ல காளையை ஒட்ட சிறு சவுக்கு இருந்தால் மாத்திரம் போதாது-அதைக் கிழக்கேயும் மேற்கேயும் திருப்ப மூக்களுங் கயிறும் வேண்டும் வீட்டிற்கு வாயிற்படி இருந் தால் காத்திரம் போதாது-வாயிற்படிக்குக் கதவு வேண்டும், கதவுக்குத் தாழ்ப்பாளும் வேண்டும்! அது போலவே, ஜனநாயக காலத்தில், குடியரசு வந்த பிறகு, தாட்டில் நல்லாட்சி நடக்க வேண்டுகாளுல், ஆளும் கட்சி ஒன்று இருந்தால் மாத்திரம் போதாது-மாற்றுக் கட்சியும்