பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#23 'பாட்டியம்மா பாட்டி ஆகி, பிறகு 'கிழவி'யாகி, பிறகு ஏ! யாரது!’ ஆகி, பிறகு போ! போ!' என் முகி பிறகு இதே தடா தொல்லை என்ருகி, பெரிய சனியன், என்ருகி பிசின், இலேசில் விடாது' என்ருகி, இப்போது கவனிப்பார், கவலைப்படுவாரற்ற ஒர் உருவமாகிவிட்ட திலே!"-இது போன்ற நயமான வர்ணிப்பு அபூர்வமாகச் சில இடங்களில் காணக் கிடைக்கும். மற்றப்படி, சுத்த வளவளா! அண்ணுதுரையின் பேச்சு, அவரைப் போலவே நாமும் பேசவேண்டும் என்ற ஆசையை அவருடைய தம்பிகள்’ பலருக்கு ஏற்படுத்தியது போலவே, அவருடைய எழுத்து அண்ணுதுரையைப் போல நாமும் எழுதவேண்டும் என்ற எழுச்சியைப் பல இளைஞர்களிடையே உண்டாக்கியது. ஆளுல், அண்ணுது தையின் படிப்பும் பயிற்சியும், அறிவும் ஆற்றலும், சிந்தனையும் உள்ளத்தின் ஒளியும் அவர்களில் எவரிடமும் இல்லாததால், உரைநடையில் அண்துைரை பெற்ற வெற்றியை மற்றவர்கள் பெற இயலாமல்போயிற்று.