உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் உரைநடை

129

அவற்றைக் கோர்த்துச் சொல்கிற முறையினால் உரைநடை இனிய வசீகரம் பெற்று விடுகிறது. இதை அவருடைய ஒவ்வொரு கதையிலும் காணமுடியும்.

ஒரு உதாரணம்:

“கட்டவிழ்த்து சரிந்த பசுங் கூந்தலிலிருந்து முகத்தில் அலைமோதும் பிரி இது.

அவளையே அள்ளி உண்ணும், பசுமை நிறைந்து, தாமரைக் குளம் போன்ற கண்கள் இவை.

நீங்காத மௌனம் நிறைந்து அம் மௌனத்திலேயே முழுகிப்போன வாய் இது.

அகன்ற மனதில் கிளர்ந்த ஆசை. வெளியும் வர இயலாது, உள்ளும் அடங்க இயலாது, முண்டிய மார்பு இது. பச்சை மேலாக்கினடியில் பட்டுப்போன்ற வயிறு இது.

அவர்களிருவரின் ஆயுளின் இன்பத்தையும் துன்பத்தையும் ஓரே மூச்சில் அளந்துவிட முயலுவது போன்ற ஆலிங்கனத்தின் அவஸ்தையிது.” (பச்சைக் கனவு)

எழுதிச் செல்கிறபோது, வாக்கியங்களில் வினைச்சொல், வாக்கிய அமைப்பு மரபு முதலியவைகளுக்கு லா. ச. ரா. முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தனி ‘எபெக்ட்’ தருவதற்காக அப்படி அப்படியே சொற்களைவிட்டு விடுவது அவருடைய உரைநடை உத்திகளில் ஒன்று

‘வயிற்றில் பகீர்’

‘உடல் மணம் காற்றுவாக்கில் சிறு வெடிப்பாய் குபீர்.’

“இத்தனை வித சப்தங்களின் நடு நாடியை அடைந்துவிட்டாற்போல் காதுகளில் ‘ரொய்ஞ் என்று ஒரு கூவல் கண்டு தலை கிரர்ர்ர்—”

“அபூர்வ ராகம், அதே வக்கரிப்பு. பிடாரன் கை பிடிபடாத பாம்பு போல், அபாயம் கலந்த படபடப்பு.