பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$35 பாரதிக்குப் பின் ஸ்வர ஸ்தானங்கள் பிடிபடாத, பழகப்பழக எல்லேயே யந்ததுபோல், நடையுடை பாவனைகளில் சிந்தும் ஒரு கவர்ச்சி. வேட்டையில் வேடுவன்மேல் பாயத் திரும்பிய மிருகம்போல பயந்த ஒரு முரட்டுத்தனம், சிலிர்சிலிர்ப்பு.' இப்படி எவ்வளவோ எடுத்துக் காட்டலாம். சர்வ சாதாரண விஷயங்களைக் கூட வெகு அழகான தடையில் லா. ச. ரா. குறிப்பிடுவது வழக்கம். அவள் அழுதாள், அல்லது கண்ணிர் சிந்தினுள் என்பதை அவர் இவ்வாறு சித்திரிக்கிருர்: (ஒருத்தி சித்திய கண்ணிர் ஒருவன் மீது விழுந்ததைக் குறிப்பிடுகையில்) - "அவன் பிடரியில் இரு நெருப்புத் துளிகன் சுரீலெனச் கட்டுப் பொரிந்து நீர்த்தன.” . இத்தகைய அழகான பிரயோகங்கள் லா. ச. ரா. எழுத்தில் சசஜமாகக் காணப்படும். 'திமிஷத்தின் சிமிழிலிருந்து மையை எடுத்து இட்டுக் கொண்டு வருடங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிருேம்.” ‘விசனத் திரை லேசாப் அவன் மேல் மடிபிரித்து விழுகையில்-' 'சப்தமே சப்திக்க சோம்பிற்று,' "மாலே முதிர்ந்து இருள் தோட்டத்தில் வாழை மரங்களிலும் வைக்கோற் போரிலும் கிணற்றடியிலும் வழிய ஆரம்பித்தது. வானம் அப்பொழுதுதான் தூக்கம் கலந்ததுபோல், அதன் பல்லாயிரம் கண்கள் ஒவ்வொன்ரு யும் ஒருங்கொருங்காயும் விழித்துச் சிமிட்ட ஆரம்பித்தன." சதான் செல்லும் நடைபாதை பச்சை நடுவில் செம்பட்டைதீட்டி, பாம்பின் சொரேலுடன் சூரியனை நோக்கி வளைந்து வளைந்து சீறி விரைந்து செம்மணல், பொடிந்த கண்ணுடியென இளம் வெய்யிலில் பளபளத்தது."