பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரை தடை 147 நமஸ்கரித்து எழுகையில், அவளைச் சூழ்ந்த இருளில் மாடத்தில் அழும் அகல் சுடர் அவள் முகத்தை ஏற்து: கையில், மூக்குத்திகளிலிருந்து நீல மின்னல்கள் கொடி பின்னிக்கொண்டே பிறந்து அவன் உடலை ஊடுருவின. அவன் புருவங்களிடைக் குங்குமப் பொட்டிலிருந்து ஒரு கண் திறந்தது. அவன் உடல் புல்லரித்தது. அவள் அவனை நோக்கி வந்தாள், துளசி மாடத்து விளக்குச் சுடரில் குளித்துவிட்டு, அதனின்றே வெளிப்பட்டுச் சிகிக்க முடியாத தூய்மையுடன் அவனை நோக்கி வருகை யில் அடிவயிற்றில் அலைகள் கருண்டு சுருண்டு தொண்டை வரையில் எழுந்து உள் வீழ்கையில் வேகத்தாளாது உடல் தவித்தது. அவள் கிட்ட வந்து ஊஞ்சலடியில் உட்கார்ந்து அவன் மடியில் தன் தலையை வைத்துக் கொண்டாள். அவ்வளவுதான்; செங்குத்தான பாறை துனியிலிருந்து யாரோ தள்ளி விட்டாற் போல் மூர்ச்சை, உடல் நினைவை அடித்துக்கொண்டு போய்விட்டது. கூடத்தில் சுவாமி விளக்கில் சுடர் பொரிந்தது” (இதழ்கள்) லா. ச. ரா. கதைகளை வாசிப்பவர்கள் எளிதில் உணரக் கூடிய ஒரு உண்மை, அவர் உவமைகளை அதிகமாக உபயோ கிக்கிருர் என்பது. சில சந்தர்ப்பங்களில், வாக்கியம் தவருது ஒரு உவமை மிளிரும்; சில இடங்களில் ஒரே வாக்கியத்தில் இரண்டு மூன்று உவமைகள் கூடத் தலை காட்டும். தயமான உவமைகள் லா. ச. ரா. எழுத்தை அணி செய்கின்றன. -

  • பிருகா அப்படித்தானிருந்தாள். புருப் போல் சின்ன முகம். நெட்டிபோல் லேசான, சிறிய உடல் அமைப்பு. கிண்டி மூக்கிலிருந்து ஜலம் கொட்டுவது போல் சதா பேத்க."