பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இடரை நடை. 135 ஒடும் வெகு நுட்பமான எண்ணச் சிதர்களின் அவசரத் தையோ, ஆர்த்தங்களின் அனுஸ்வரங்களையோ ஒரு கொச்சைப் பதம் தைரியமாய்க் அவ்விப் பிடித்து சந்ததியின் பயனுக்கு நிரந்தரமாய் நிறுத்தி விட முடியும். அகராதியில் உள்ள அத்தனை ஆயிரம் இலக்கண வார்த்தைகளும் அணி அணியாய்ப் பறந்து துரத்திலுைம் எட்ட முடியாத நிலைமை கன் வாழ்க்கையில் எவ்வளவோ இருக்கின்றன. ஐலோ, நெஞ்சில் இருக்கிறது, சொல்லவல்லேயே என்னும் தவிப்புக்கள் எவ்வளவோ இருக்கின்றன. அம்மாதிரி இடங்களில் பிரம்மாஸ்திரம் போ ல் கொச்சையைப் பண்ணியே தீரவேண்டியிருக்கிறது. இன்னும் பார்க்கப் போளுல், அதிகமாக மெருகு ஏற்றி ஏற்றி இலக்கணத்தில் செப்பனிட்ட பாஷையால் அர்த்தத் தேய்வுபட்ட விஷயங் கள் கொச்சை பாஷையில் புத்துயிர் பெறக்கூடும். ஆளுல் வெறுமென இந்தாங்க, வத்தாங்க, இருந்தாங்கோ, ஏ.டீ குட்டி, ஏ. புன்ளே! இந்த ரீதியில் பக்கம் பக்கமாய் நிரப்பி விட்டால் மாத்திரம் கொச்சையை முறையாய் உபயோகிப்பதாகி விடாது. அர்த்த புஷ்டியுடன் எழும் கொச்சைதாம் வாக்கின் நோக்கத்தை நிரப்பும் வார்த் தைகள். சத்தியத்தின் நேர்வாக்காய் அமைவதால் கொச்சைக்கு உக்கிரம் உண்டு. ஆகையால் கொச்சையின் உபயோகத் திற்குப் பொறுப்பு உண்டு. இலக்கியத்தில் உண்மையான பக்தி சிரத்தையுள்ளவர்களுக்கு இந்த உக்கிரம் தெரியாமல் போகாது. இடமும் அளவு மறிந்து உபயோகிப்பவனுடைய பேளு முனையிலும் நாக்கு நுனியிலும் கொச்சை வாக்கு பெரிய சக்தியாக மாறிவிட முடியும் என்பது என் துணிபு.’