பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j92 பாரதிக்குப் பின் இல்லாத எத்தன எத்தனையோ வழக்கொழிந்த சொற்கள் இவர்களின் அன்ருடப் பேச்சு வழக்கில் அயைாசமாகக் கையாளப்படுகின்றன. வார்த்தைகள் புதிதாய்ச் செய் தெடுக்க முயற்சிகள் நடக்கும் இக்காலத்தில், நம் பழந்தமிழ் மக்கள் சமூகத்தில் கொஞ்சம் பேர்களுக் கிடையிலாவது வாழையடி வாழையாய் இப்போதும் வழக்கில் இருந்துவரும் சில சொற்களை சுவீகரித்துக் கோள்வதால் நம் மொழியின் தூய்மையோ, புனிதிமோ ஒன்றும் கற்பழித்து போய்விடாது என்பதுதான் என் தாத்பரியம்.” இம் மேற்கோள் நீல. பத்மநாபனின் ககுத்துக்களை தெளிவுபடுத்த உதவுவதோடு அவருடைய உரைநடையின் மற்ருெரு வகையை-கட்டுரைகளில் அவர் கையாள்கிற தடையின் தன்மையை-காட்டுகிற சான்று ஆகவும் அமைகிறது. . . - நீல. பத்மநாபனின் உரைநடையில் மலையாளச் சொற்கனோடு சமஸ்கிருத பதங்களும் தாராளமாய் கலந்து வருகின்றன. “சிங்க விஞயக தேவஸ்தானத்து பிள்ளையார் கோயில் நிர்மால்ய பூஜையின் தீபாராதனையில் எழும்பிய மணியோசைச் சிதறல்கள் மார்கழி மாத வைகறைக் குளிரின் ஊடே கன்னங்கரு இருளில் பிரவகித்துக் கிழக்கு தோக்கி நின்ற கோவிலை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, கிழக்கு மேற்கில் இடத்த நெடுந்தெரு முனையில் சென்று சேருகையில், ஆன்மீகத்தின் அடக்கத் தொணி மட்டுமே மிஞ்சியிருந்தது.” - நாதஸ்வரமும் கொட்டு மேளமும் கள்ளுத்தமாக 蕊寧f落 கேட்டுக்கொண்டிருந்தது.” -