பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை #93; 'கண்முன்னுல் பிரத்துட்சப்பட்டு விடும்’ "ஆச்சி வியாக்கியானித்தாள்.' ’அனைத்தையும் வேதாந்திகரித்துக்காட்ட’ 'தன்னுடைய வாழ்வில் ஒரு துர்பல திமிஷத்தில் ஒரு சபல எண்ணம் சாட்சாத்கரிக்கப்படுவதை வெளிச்சத்தில் தரிசிக்க அவன் கண்கள் கூசத்தான் செய்தன.” ‘மினுக் மினுக்கென்று துரங்கி வழிந்து கொண்டிகுந்த சிம்ணி விளக்கும் அரூபியாகி விட்டதால் குடிசையும் அப்பிரத்யகமாகி இருந்தது.” உதாரணங்கள் போதும், இவற்றை கவனித்தானே, இவர் தேவையில்லாமல் சமஸ்கிருத பதங்களே அளவுக்கு அதிகமாகக் கையாள்கிருர் என்பது புரிந்து விடும். வாசகர் களில் பலர் இதைப் பெரும் குறையாகக் கருதுகிருர்கள். இதையும் ஒரு தனிச் சிறப்பாக நீல, பத்மநாபன் மதிக்கிருரோ என்னவோ! சில இடங்களில் இவர் தமிழில் வழக்கமாக எழுதப் படாத விதத்தில் சொற்களைக் கையாள்கிரு.ர். "பிரத்யேக மாக’ என்பதை பிரத்தேகமாக’ என்றே எழுதுகிரு.ர். "அவனிடம் அறிவித்தான்’ என்ற அர்த்தத்தில் அவனை அறிவித்தான்’ என்று தான் சுழுதுகிரு.ர். அவன் ஒளியை பயந்தான்’ என்று குறிப்பிடுகிருச். ஆங்கில வார்த்தை அமைப்புகளின் நேரடி மொழி பெயர்ப்பு போல் தொனிக்கும் இத்தகைய பிரயோகங்கள் கேரளத் தமிழில் வழக்கில் இருக்கின்றனவோ என்னவோஎனக்குத் தெரியாது. - கேரளத் தமிழின் சில வழக்குச் சொற்கள் தமிழக வாசகர்களுக்குப் புரியாது போகலாம் என்ற நினைப்பில்