பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 தான் உத்தலமென்பது என்னுடைய ககதி. எந்த விஷயம் எழுதிலுைம் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது. பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து, அதா வது ஜனங்களுக்குச் சற்றேனும் பழக்கமில்லாமல் தனக்கும் அதிக பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித்தால் வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும். சந் தேகமில்லை. ஆலுைம் ஒரு வழியாக முடிக்கும்போது, வாய்க்கு வழங்குகிறதா என்று வாசித்துப் பார்த்துக் கொன் ளுதல் நல்லது. அல்லது ஒரு நண்பனிடம் படித்துக் காட் டும் வழக்கம் வைத்துக்கொள்ள வேண்டும். சொல்லவந்த விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு கோணல், திருகன் ஒன்றுமில்லாமல் நடை நேராகச் செல்ல வேண்டும். முன் யோசனை இல்லா மலே நேராக எழுதும் திறமையை வாணி கொடுத்துவிட் டால், பின்பு ஸங்கட மில்லே. ஆரம்பத்திலே, அனதிலே கட்டி முடித்த வசனங்களேயே எழுதுவது நன்று. உன்னத்திலே நேர்மையும் தைர்யமுமிருந்தால் கை பிறகு தாளுகவே நேரான எழுத்து எழுதும். தைரியம் இல்லாவிட்டால் வச ம்ை தள்ளாடும். சண்டிமாடு போல ஒரிடத்தில் ந்ேது படுத் துக்கொள்ளும். வாலேப் பிடித்து எவ்வளவு திருகிஞலும் எழுந்திருக்காது. வசன நடை. கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே, தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்குமுடையதாக இருக்க வேண்டும். இவற்றுள் ஒழுக்கமாவது தட்டுத் தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை, நமது தற்கால வசன நடையில் சரி யான ஒட்டமில்லை. தள்ளாட்டம் அதிகமாகக் காணப்படு கிறது. உள்ளத்திலே தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக் கொண்டால், கை நேரான தமிழ் நடை எழுதும்." turr-2