பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$3 பாரதிக்குப் பின் யெடுக்கும் வினைஞனும் அதன் கட்டோன்றுவனவற்றிற் கட்டியுங் குறைத்தும் ஏதொன்றுஞ் செய்யமாட்டுவான் அல்லன்; நிழலுருக்கள், தான் பொருந்துங் கண்ணுடிப் பலகையிற் செவ்வையாகப் பதியப் பார்த்தும், பின்னர் அவற்றைக் காகிதத்தில் அச்சிட்டுத் தரும் அவ்வளவே அவனுக்குரிய தொழிலாகும். மற்றும், கைவல் ஓவியளுல் தீட்டப்படும் ஓவியமோ, ஓரிடத்தில் ஒரு காலத்தில் தோன்றும் ஒரு நிலக்காட்சியையோ அல்லது சில சிற்றுயிர் களேயோ, அல்லது அழகிற் சிறந்த மக்களையோ ஆங்காங்கு காணப்படும் இயற்கைக்கு முரணுமல் மேன்மேல் அழகு மிகுத்து, அவ்வவற்றின் நிறத்திற்கு ஏற்ற வண்ணங்களாற் குழைத்தேழுதிக்காட்டப்பெற்றுத்திகழ்வதொன்ருகும்.அழகி யவற்றுேடு அருவருப்பானவுங் கலந்து காணப்படுமாயின் அவற்றுட் பின்னேயவற்றை நீக்கி முன்னேயவற்றை மட்டுமே தெரித்தெடுத்து வரைகுவன் கைவல் ஒவியன்; ஒரோவொரு கால் அவன் திருத்தமான வடிவங்களின் தோற்றத்தை மேலுஞ் சிறப்பாக விளங்க வைத்தற் பொருட்டுத் திருத்தமில்லாதவைகளையும் உடன் வைத்து வரைய வேண்டுவஞயின், அவற்றின் அருவருப்புத் தன்மையைப் பலபடியாத் குறைத்து வரைகுவனே பன்றி, அதனையுள்ள வாறே வரைந்து நமது சுமையுணர்வினைக் கெடுப்பான் இல்லன்; எனவே, அவன் பல நாளும் பல முறையும் ஆய்ந்தாய்ந்து பார்த்துத் தான் வரையும் பொருள் வடிவங்களை இயற்கையிற் காணும் அளவினும் அழகு செய்து, பகலவைெளி படும் பகுதி ஒளிரவும் அது படாத பகுதி சிறிதே இருனவும் வண்ணங்களை ஆற்றித் தொட்டெழுதி, அங்கனம் எழுதிய ஓவியத்தைக் காண்பா ரெல்லாம், ஆ! இஃதியற்கையை எவ்வளவு ஒத்திருக் கின்றது! எனினும், சது இயற்கை யழகினும் எவ்வளவு சிறந்து துலங்குகின்றது!’ என்று வியந்து கூறிப் பெரிதும் இன்புறச் செய்யுஞ் செயற்கருஞ் செய்கைத் திறனுடையன