பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ பாரதிக்குப் பின் வரதாச்சாரியாரைக் கூடத் தோற்கடித்து முதுகில் மன் காட்டக் கூடியவராயிருக்கிருர் என்ருல், வேறு என்ன இசால் ஒஅேண்டும்: இவருடைய கச்சேரி சம்பந்தமாக ஒரு விஷயத்தில் நான் அபிப் பிராயப் பேதப்படுகிறேன். அதாவது அதைச் சங்கீதக் கச்சேரி என்று சொல்வது பொருத்தமில்லை என்று தினக்கிறேன். ஸ்வரங்களின் மகா யுத்தம்” என்று சொல்வது ஒரு வேளை பொருத்தமாய் இருக்கலாம். கச்சேரி ஆரம்பிப்பதற்கு முன்னுல் பார்த்தால் மனுஷ்யர் வைதிகக் குடுமியுடன், கதர்ச் சட்டை போட்டுக் கொண்டு பரம சாதுவாய்க் காணப்படுகிரு.ர். கச்சேரி ஆரம்பித்து விட்டாலோ, அடே அப்பா! என்ன மாறுதல் அந்த இவரங்கள் தான் அவரிடம் என்னபாடு படுகின்றன! நில்லு அங்கேயே! என்று இரண்டு கையாலும் தடுத்து நிறுத் து கிருர் ஒரு சமயம். வந்துடு இங்கே!' என்று இரு கைகளா இலும் அனைத்துப் பிடித்துத் தலையோடு தலே முட்ட விடுகிருர் இன்ஞெரு சமயம், மற்ருெரு சமயம் பேயறைவது போல் ஒரே அறையாய் அறைகிருர். அப்புறம், ஸ்வரங்களை உரலில் போட்டு உலக்கை கொண்டு அவல் இடிப்பது போல் இடிக் கிருர். பின்னர் வில்லில் நானேற்றிக் காதளவு இழுத்து வாங்கிப் பாணப் பிரயோகம் செய்கிருர். பிறகு கழுத்தைப் பிடித்து நெட்டுகிரு.ர். கோபம் மித மிஞ்சிப் போய் விட்டாலோ, “இதோ வேருடன் கல்வி எறிந்து விடுகிற்ேன் பார்!’ என்று சொல்வி இரண்டு கையையும் கீழேகொடுத்து வேரைப் பறிக்கிரு.ர். நல்ல வேளையாக, மேடையில் உட்கார்ந்திருந்தாரோ, கான ம ந் திர த் தி ன் தரை பிழைத்ததோ! தரையில் மட்டும் உட்கார்ந்திருந்தால், நிச்சயமாகப் பெரிய குழி ஒன்று தோண்டியிருப்பார் பாவம்! சங்கீத வித்வான்களிடம் அங்க சேஷ்டைகளை நான் அதிகமாய் ஆட்சேபிப்பதாக நேயர்கள் எண்ணக் கூடாது.