பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரை தடை 73 னும் எண்ணங்களை எடுத்துச் சொல்லும் ஆற்றல் அவருக் கிருந்தது. அரசியல் விஷயங்கள் பற்றிச் சிறு சிறு புத்தகங் களும் எழுதி வெளியிட்டார் அவர். வங்கம் தந்த தங்கம்’ என்ற பெயரில் சுபாஷ் சந்திர போஸ் பற்றி சொக்க விங்கம் எழுதிய வரலாற்றில் அவருடை உரை நடையின் சிறப்பைக் காண மூடியும், பிற்காலத்தில் டி. எஸ். சொக்க விங்கம் கதைகளும் எழுதினர். "நகர தூதன்' ஆசிரியர் திருமலைசாமியின் உரைநடை அந்தக் காலத்தில் பிரசித்தி பெற்றிருந்தது. பேஞ. நர்த்தனம் என்ற தலைப்பில் அவர் வாரம் தோறும் எழுதி வந்த கட்டுரைகள் வேகம், சிந்தனை, வர்ணிப்பு, குத்தும் கிண்டல், சுளிர் சவுக்கடி எல்லாம் கொண்டிருந்தன. நாட்டின் நிலமை, அரசியல் பிரச்னைகள், தலைவர் வரலாறு முதலியவற்றை சுவாரஸ்யமாக எழுதி, காலளு வெளியீடுகளாக எம். எஸ். சுப்பிரமணிய ஐயர் பரப்பி வந்தார். அவருடைய உரைநடையில் எளிமையும், வேகமும் கலந்திருந்ததோடு சொங் சாதுரியமும் நயம் சேர்த்தது. காசா லேசா என்பார்கள் சிலர். காசாலே சாவோரும் உண்டு-இது ஒரு சிறு உதாரணம்.) ão விஞ்ஞான உண்மைகளே நல்ல தமிழ் நடையில் எடுத்துச் சொன்ன பெருமை பெ. நா. அப்பு:ஸ்வாமி ஐயருக்கு உண்டு. அவற்றை ரசமான முறையில் இனிமை யாகச் சோல்லக்கூடிய ஒரு நடையை அவர் வளர்த்து வந்தார். "அற்புத உலகம்’ ‘விஞ்ஞானத்தின் விந்தைகள்' போன்ற அவருடைய ஆரம்பகால நூல்கள் இதற்கு உதா ானாைக அமையும். தி.சே.சேள. ராஜன் தமது அரசியல் அனுபவங்களையும், வாழ்க்கை வரலாற்றையும் எழுதியிருக்கிமூர்,

  1. 7–5