பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஒதுங்கி நின்று. உள்ளதெல்லாவற்றையும், ஒரு குறிப் பிட்ட கோணத்தின் நோக்குப் பூசாவையும், கனமான விஷயத்தை ஏற்க மறுக்கிற மெலிந்த வார்த்தைகளில் சொல்லி விடுகிற காரியத்தை மெனணி சாதித்திருக்கிருt. அவர் நடையும் நோக்கும் பூரணமானவை. இந்த அம்சம் மிகச் சிறந்தது, தனிப்பட்டது என்று பிரித்தெடுக்க முடியாது. மொத்தத்தில் இதுதான் மெளனி என்று சோல்லலாம்," ேெளனி கதைகள் பற்றி க. நா. சுப்ரமண்யம் இப்படிக் குறிப்பிட்டிருக்கிரு.ர். மென்னி கதைகளின் நயங்களே ஆராய்வது என் நோக்கம் அல்ல. தமிழ் உரை நடையில் புதுமையும் வளமும் சேர்த்திருப்பவர்களில், பரிசோதனை செய்திருப்ப வர்களில், முக்கியமான சிலரின் வசன நடை குறித்துச் சிந்திப்பது தான் இத்தொடரின் நோக்கம் ஆகும். அந்த ரீதியில் மெளனியின் உரை நடையை இங்கே கவனிக்கலாம். உளப் பதிவுகளை, மனசஞ்சலங்களை, நினைவுச் சலனங் களே, உணர்வுச் கழிப்புகளை, சிந்தனை ஒட்டங்களைக் கொண்டு மெளனி தன் கதைகளைப் பின்னியிருக்கிரு.ர். அதற்குத் தக்கபடி எளிமையாக ஆரம்பித்து, நடை போகப் போக ஒரு கனமும் பின்னலும் பெறுவதை அவர் கதைகளில் காணலாம்,