பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

பாரதிதாசன்

சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்?

என்று மகளைக் கேட்ட தந்தை அடுத்த வரிகளில் கல்வியின் சிறப்பையும் உயர்வையும் எடுத்துச் சொல்கிறார். மேலும் கல்வியை விலை கொடுத்து வாங்க முடியாது என்பதையும் விளக்குகிறார்.

விலைபோட்டு வாங்கவா முடியும்?-கல்வி
வேளைதோறும் கற்று வருவதால் படியும்
மலைவாழை அல்லவோ கல்வி-நீ
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!

இவ்வாறு கல்வியின் சிறப்பை விளக்கிய தந்தை, தன்மகள் சரியாகப் படித்து முன்னேறாவிட்டால் எதிர்காலச் சமூகம் தன்னைப் 'பொறுப்பற்ற தந்தை' என்று இகழும் என்பதையும் எடுத்துச் சொல்லிப் பெண்கல்வியை வற்புறுத்துகிறார்.

பாரதிதாசன் 'அன்னையின் ஆவல்' என்ற இசைப்பாடலொன்று எழுதியுள்ளார். அதில் ஓர் அன்னை 'உன்மகள் ஓவியம் கற்றாள்; காவியம் கற்றாள். அவள் எழுதிய கவிதை தாளிகையில் வந்தது. அதைப்படித்து ஊரில் ஏற்பட்ட கலவரம் அடங்கியது என்று கூறி ஊர் மக்கள் என்னைப் பாராட்ட வேண்டும். எதிர் காலத்தில் உன் கணவனை நீயே தேர்ந்தெடுத்து 'தேவை இவன்' என்று துணிவுடன் கூற வேண்டும். அவ்வாறு நீ கூறும் சொல் எனக்குக் கற்கண்டு போல் இனிக்கும்!' என்று கூறுகிறாள்.


ஓவியம்கற் றாள் உன்மகள் காவியம் கற் றாளெனவே
ஊரார் உன்றனை மெச்சும் போது - கண்ணே
உவகைதான் தாங்குமோஎன் காது நீ ஓர்
பாஎழுதும் திறத்தால் ஊர் அமைதி கொண்டதென்று
பாரோர் புகழ்வ தெந்தாள்? ஓது

மாவடு நிகர்விழிச் சின்னஞ் சிறுமியே -நீ
மங்கை எனும் பருவம் கொண்டு -காதல்