பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரைப்பட நாடக எழுத்தாளர்

97


யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று எழுந்த மகாகவிபாரதி, அவர் சொன்னது போல இனிக்க எழுதிப் பாடிக் குவித்துத் தமிழுக்கோர் ஒளியை தமிழுக்கோர் எழுச்சியை, உண்டு பண்ணினார். தம் வறுமையிலும் இவ்வரிய தொண்டு பண்ணினார்.

இந்நாள் அவர் இளைஞர், முதியர், கல்விச் செல்வர், பொருட் செல்வர் அனைவர் உள்ளத்துள்ளும் வாழ்கின்றார் எனின் அது வியப்பன்று.

மகாகவி பாரதி வாழ்க்கை வரலாற்றை - பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்த திறத்தை, திரைப்படம் ஆக்க விழைந்தேன்.

“எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப்பெரும் தொழில் நாட்டுவம் வாரீர்”

(பாரதி)


இங்ஙனம் தங்கள்
பாரதிதாசன்


திருவாளர் எஸ். இராமநாதன் - முன்னாள் அமைச்சர்
திருவாளர் மணவாள இராமானுசம் - முன்னாள் துணைவேந்தர்
திருவாளர் வி.பி. இராமன் - சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
திருவாளர் அருண். - எழுத்தாளர் நூலாசிரியர்
திருவாளர் அகிலன் - எழுத்தாளர் நூலாசிரியர்
திருவாளர் பத்பநாபன் - துணையாசிரியர், சுதேசமித்திரன்
திருவாளர். முருகதாசா - திரைப்பட இயக்குநர்
திருவாளர். கிருஷ்ணசாமி - திரைப்பட இயக்குநர்
திருவாளர். நாரண துரைக்கண்ணன் - நூலாசிரியர், பத்திரிகாசிரியர்
திருவாளர். இராதாமணாளன் - துணையாசிரியர், நவ இந்தியா
திருவாளர். அம்மையப்பன் - கலை இயக்குநர்
திருமதி. தங்கம்மாள் பாரதி - பாரதி மகள்
திருமதி. சகுந்தலா பாரதி - பாரதி மகள்