1. ஆ. பாரதிதாசன் உவமைநயம் அதற்கு அவர் காட்டும் உவமை என்ன என்ன! என்று வாசகனையும் வியப்பில் ஆழ்த்தி விடுகிறது. பொழி கதிரை மறைத் தொளிகொள் முகிலைப் போல னை ஆடை பொன்னொளியைப் பெற்ற தென்றால் அழகுடையாள் திருமேனி என்ன! என்ன!’ தாமரை இதழ் உவமை கூட ஒர் புதுமை பெறுகிறது அவரிடம். காதலனை வருக என்று அழைக்கிறது கன்னியின் கை எப்படி? ஒரு செந்தாமரை இதழ் தான் தென்றலால் உதறல் போல வருக என்றழைத்த கை' அன்னை தன் குழந்தைக்குத் தாலாட்டு கிறாள். அதில் எத்தனை இனியஉவமைகள் சிரிக் கின்றன! பழமை புதுமெருகு ஏற்று மின்னுவதைக் காண்கிறோம். "சீரோடு பூத்திருந்த செத்தாமரை மீது தேரோடி மொய்த்துலவு நீலமணி வண்டுதனைச் செவ்விதழால் தான் மூடும் சேதிபோல் உன் விழியை அவ் இமையால் மூடியே அன்புடையாய் நீ யுறங்கு! கன்னங் கறேலென்று காடுபட்ட மேகத்தில் மின்னி வெளிப்பட்ட விண்மீன்போல் உன்றன் விழி சின்ன இமையைத் திறந்ததேன்? நீ புறங்கு t மங்கையின் வதனம் மதிதான். மதியைக் கண்ட அல்லி மலர்வது இயல்பு. நமது இலக்கியத் தில் இதற்குக் குறைவே கிடையாது. இந்தக் காட்