அறிவு மணம்
புதுநிலவு போல்முகத்தாள் நின்றாள் வெளியில்
மிதிவண்டிமேல்விரைந்து சென்றான்-மதிவாணன்! பார்தாள் அவன்பார்த்தான்் பாய்காதல் மின்தாக்க
வேர்த்தாள் அவன்வேர்தான்் நெஞ்சு.
மறுநாளின் மாலை மதிவாணன் வந்தான்் பிறைநுதலாளும்காணப் பெற்றாள்-சிறுக விரித்தான்், விரித்தாள் இதழ்க்கூட்டு மின்னச் சிரித்தாள் சிரித்தான்்அச்சேய். -
மூன்றுநாள் முத்துநகை நின்றிருந்தாள் முன்போல தோன்றாத் துணையானான் தோன்றினான்-ஈன்றாரை மீறென்றான் மீறினாள் மின்னே மிதிவண்டி ஏறென்றான் ஏறினாள் பெண்.
பெற்றோர் இதுகேட்டார் சற்றும் பிடிக்கவில்லை, அற்றனவே சாதிமதம் ஆ என்றே-சுற்றமுடன் கட்டைவண்டி ஏறிக் கதறி மிதிவண்டி தொட்டவழிச் சென்றார் தொடர்ந்து.
சாதிமதக் கட்டைவண்டிதன்னிலே செல்லுகையில்
கோதையும் சேயும் குளத்தூர்போய்-ஓதியே
அன்புற்றார் வாழ்த்த அறிவு மணமுடித்தே
இன்புற்றிருந்தார்கள் நன்கு. - குயில் 1948 Ο Ο Ο