பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவு மணம்

புதுநிலவு போல்முகத்தாள் நின்றாள் வெளியில்

மிதிவண்டிமேல்விரைந்து சென்றான்-மதிவாணன்! பார்தாள் அவன்பார்த்தான்் பாய்காதல் மின்தாக்க

வேர்த்தாள் அவன்வேர்தான்் நெஞ்சு.

மறுநாளின் மாலை மதிவாணன் வந்தான்் பிறைநுதலாளும்காணப் பெற்றாள்-சிறுக விரித்தான்், விரித்தாள் இதழ்க்கூட்டு மின்னச் சிரித்தாள் சிரித்தான்்அச்சேய். -

மூன்றுநாள் முத்துநகை நின்றிருந்தாள் முன்போல தோன்றாத் துணையானான் தோன்றினான்-ஈன்றாரை மீறென்றான் மீறினாள் மின்னே மிதிவண்டி ஏறென்றான் ஏறினாள் பெண்.

பெற்றோர் இதுகேட்டார் சற்றும் பிடிக்கவில்லை, அற்றனவே சாதிமதம் ஆ என்றே-சுற்றமுடன் கட்டைவண்டி ஏறிக் கதறி மிதிவண்டி தொட்டவழிச் சென்றார் தொடர்ந்து.

சாதிமதக் கட்டைவண்டிதன்னிலே செல்லுகையில்

கோதையும் சேயும் குளத்தூர்போய்-ஓதியே

அன்புற்றார் வாழ்த்த அறிவு மணமுடித்தே

இன்புற்றிருந்தார்கள் நன்கு. - குயில் 1948 Ο Ο Ο