பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பாரதிதாசன்

பையனிடம் உண்டா எனப்பாரும் மற்றவரை நைய உரைத்தல் நலமில்லை என்றுரைத்தான்். விண்ணில் கிடக்கின்றான் மாற்றம் உணர்ந்தாயோ என்றான் பெருமாள். எதிரே ஆள் நீள் அஞ்சல் ஒன்றைப் பெருமாள்பால் நீட்டிவிட்டோடிவிட்டான். வீட்டின் ஒரே அறைக்குள் வேலனும் தோகையும் காட்டுப் புறாக்களைப்போல் காதல் நலம் காணுகின்றார் ஒத்த உளத்தை உயர்ந்த திருமணத்தைப் பத்துப்பேரைக் கூட்டிப் பாராட்ட எண்ணமுண்டா? பாராட்டு நல்விழா எந்நாள்? இருபெற்றோர் நேரே உரைத்திடுக. நெல்லிமா வீட்டிலுள்ளார். இங்ங்ணம் தோகையாள்வேலன் இருவர் ஒப்பம். அங்கே இதைப்படித்தான்் ஆம் ஆம்பொருத்தம் என்றான். வேலவன் தோகை விழைவின் விழாவையே ஞாலமே வாழ்த்தியது நன்று.

Ο Ο Ο