இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கதைப் பாடல்கள் 25
பாப் புனை தற்கான-அது பவம்பல புகல்வான். தீர்ப்புற அன்னவளும்-ஆக சித்திரம் நன்மதுரம், - சேர்ப்புறு வித்தாரம்-எனும் தீங்கவிதை அனைத்தும்,
கற்றுவர லானாள்-அது கால பரியந்தம் சற்றும் அவன் முகத்தை-அவள் சந்திக்கவில்லை! விழி அற்றவனைப் பார்த்தல்-ஓர் அபசகுன மென்றோ? உற்றதோர் நோயுட்ையாள்-என்று உதாரனும் பார்த்ததில்லை.
இவ்விதம் நாட்கள் பலப்-பல ஏகிட ஓர் தினத்தில் செவ்விழிவேலுடையாள்-அந்த மேடையிற் காத்திருந்தாள். அவ்வமயந்தனிலே-விண் அத்தனையும் ஒளியால் கவ்வி உயர்ந்தது.பார்-இருட் காட்டை அழித்த நிலா!
அமுதவல்லி காத்திருந்த மேடையண்டை
அழகியபூஞ்சோலையண்டை உதாரன் நின்றே,
இமையாது நோக்கினான் முழுநிலாவை!
இருவிழியால் தழுவினான்; மனத்தால் உண்டான்!