பக்கம்:பாரதிதாசன் கதைப்பாடல்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பாரதிதாசன்

சுமை சுமையாய் உவப்பெடுக்க, உணர்வு வெள்ளம்

தூண்டிவிட ஆஆஆஎன்றான்; வாணி

அமைந்திட்டாள் நற்கவிதை மழைபோற் பெய்தான்்! அத்தனையும் கேட்டிருந்தாள்.அமுத வல்லி.

'நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து

நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்! கோலமுழுதும்காட்டி விட்டால் காதற்

கொள்கையிலே இவ்வுலகம் சாமோ? வானச் சோலையிலே பூத்தனிப் பூவோ நீதான்்!

சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ! காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்

கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ!

அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்;

அவ்வாறே வான்கண்டேன்; திசைகள் கண்டேன்; பிந்தியந்தக் காரிருள்தான்்சிரித்த துண்டோ?

பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்்? சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்

சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி இந்தாவென்றே இயற்கை அன்னை வானில்

எழில்வாழ்வைச் சித்திரித்த வண்ணந்தான்ோ!

உனைக்காணும் போதினிலே என்னு ளத்தில் ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவதில்லை, நித்திய தரித்திரராய் உழைத்துழைத்துத் தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள் சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக் கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்

கவின் நிலவே உனைக்காணும் இன்பம் தான்ோ!