இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கதைப் பாடல்கள் 49
வேலையிலே அமைத்துவிடு ராசாங்கத்தில்! சேனாபதி :
உள்ளது நீ சொன்னபடி செய்க (கிழவரை நோக்கி) ஐயா, ஊர்தோறும் அலையாதீர்! இங்கிருப்பீர்!
கிழவர் :
அரண்மனையில் எவ்விடத்தும் சஞ்சரிக்க அனுமதிப்பீர்! என்னால்இவ் வரசாங்கத்தில் விரைவில் பல ரகசியங்கள் வெளியாம்! என்று விளங்குகின்ற தென்கருத்தில் சொல்லி விட்டேன்.
சேனாபதி :
பெரியாரே, அவ்வாறே! அட்டியில்லை.
மந்திரி : பேதமில்லை, இன்றுமுதல் நீருமிந்த அரசபிரதான்ியரில் ஒருவர் ஆனி. அறிவுபெற்ற படியாலே எல்லாம் பெற்றீர்!
காட்சி - 6
(சேனாபதி காங்கேயன், தான்ே மணிபுரி அரசனென்று நாளைக்கு மகுடாபிஷேகம் செய்துகொள்ளப்
போகிறான். வெளிநாட்டரசர்களும் வருகின்ற நேரம். மந்திரி நாட்டின் நிலைமையைச் சேனாபதிக்குத் தெரிவிக்கிறான்.)
4