இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
82 பாரதிதாசன்
இரிசன் :
உனக்குத் திருமணம் உடனே நடத்த என்மகளைத் தான்் உன்தந்தை கேட்டார் பெண்ணை உன்தந்தை பேசினார், பார்த்தார். நீயும் ஒருமுறை நேரில் பார்ப்பாய்.
நல்லமுத்து : -
அப்பா பார்த்தார் ക്ഷേ போதும். இரிசன் :
மணந்து கொள்வார் இணங்க வேண்டுமே? நல்லமுத்து :
அப்பா இணங்கினார்! அதுவே போதும்!
இரிசன் :
கட்டிக் கொள்பவர் கண்ணுக்குப் பிடித்தமா என்பது தான்ே எனக்கு வேண்டும். நல்லமுத்து :
பெற்ற தந்தைக்குப் பிடித்ததா, இல்லையா? பிடித்தம் என்றால், எனக்கும் பிடித்தமே!
இரிசன் :
என்மகள், ஒருமுறை உன்னைப் பார்க்க நினைப்பதாலே நீவர வேண்டும்.
நல்லமுத்து :
அப்பாவைப் பார்த்தாள் அதுவே போதும் அப்பா கருத்துக்கு அட்டி உண்டா?