பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப்பாடல்கள்

53


தெய்வமில்லை என்னுஞ் சிதடர்கள் வாய்மூடச்
செய்வரத னாகியநம் தெய்வ சிகாமணியோ!

துங்கத் தமிழ்மொழியின் தூய்மை எவரும் மறியச்
சங்கப் புலவரிடைத் தங்கியருள் நாவலரோ!

ஆரா வமுதோ அருட்கடலோ எம்முடைய
தீராத துன்பமெலாந் தீர்க்குந் சிவக்கொழுந்தோ!

கருதும் அடியார் கவலையெலாம் போக்கி
மருத நிழலினிடைவாழ்ந்தருளும் மாமணியோ!

10. சங்கராசாரியர் தாலாட்டு,

(19ஆம் நூற்றாண்டின் இறதி, 21 கண்ணிகள். அச்சுதனந்த சுவாமிகள் பாடியது.)

புலனாதி கள்வழயிற் போகா தருகிருத்தி
நலமார் அருட்பார்வை நாட்டவந்த நாயகனோ,

நானிவனென் றுன்னாமல் நடுவா யிலங்கறவே
தானமரும் நிலையிதெனச் சாற்றுஞ் சகத்குருவோ.

மாயை அவித்தையெலாம் மாண்டவழி காணாமல்
ஓயும் படியருளில் ஒன்றவைக்கும் உத்தமனோ.

துவிதப் பிழையறுக்கத் துசங்கட்டி யொன்றாக்கி
விவிதச்சங் கற்பமெலாம் வேரறச்செய் வித்தகனோ.

என்னைஅழித் தெழுந்த இன்பப் பெருக்கோபின்
தன்னையெனக் களித்த சமரசசாட் சாத்பரனோ.