தாலாட்டுப் பாடல்கள் 63
மன்னுதர்மம் செய்துவரும் மன்னவரின் புத்திரனே மார்பிற்பதக்கமின்ன மகரகண்டியார்ந்து மின்ன ஐங்கலப்பூ மெத்தையிலே ஐயனே நீ கண்ணுறங்காய் பிள்ளையில்லை என்று சொல்லித்தில்லைவனம் போய் முழுகி மைந்தரில்லை என்று சொல்லி வானவரைத் தான்ோக்கி வருந்தித் தவமிருந்து பெற்றெடுத்த கண்மணியே பிள்ளைக்கலி தீர்க்கவந்த சீராளாகண்ணுறங்காய் ஆண்பிள்ளைத் தாலாட்டு
(19 ஆம் நூற்றாண்டு 52 கண்ணிகள் எவ்வுளூர் ராமசாமிச் செட்டியார்)
கின்னரி வாசிக்கக் கிளிகளுடன் பூவை கொஞ்ச வன்னமணித் தொட்டிலிலே வாழ்வேநீ கண்வளராய் பிள்ளைக் கலிதீர்க்கப்பெருக்கமுடன் வந்துதிக்க வள்ளலே திவ்ய மரகதமே கண்வளராய் அக்காள் அடித்தாளோ அம்மான்மார் வைதாரோ மிக்காகத் தேம்புவதேன் வித்தகனே கண்வளராய்
வாசமலரெடுத்து வாசிகையாகத் தொடுத்து நேசமுடன் மாமிதந்தாள் நித்தலமே கண்வளராய்
ஒசைக் குயில் கூவ உவந்து மயில் கூத்தாட நேசக் கிளிகள் கொஞ்சநிலைவிளக்கே கண்வளராய் பெண்பிள்ளைத் தாலாட்டு
(19 ஆம் நூற்றாண்டு. 30 கண்ணிகள். ஆசிரியர் எவ்வுளுர் ராமசாமிச்செட்டியார்)
மண் பிசைந்தே உண்டநெடுமால்மயங்க வந்தமின்னே