இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாலாட்டுப் பாடல்கள்
67
எல்லாம் கடவுள் செயல் என்று
துடை நடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய
வந்தவளே!
வாயில் இட்டுத் தொப்பை வளர்க்கும்
சதிக்கிடங்கைக்
கோயில் என்று காசுதரும் கொள்கை
தவிர்ப்பவளே!
சாணிக்குப் பொட்டிட்டுச்சாமி என்பார்
செய்கைக்கு
நாணி உறங்கு; நகைத்து நீ
கண்ணுறங்கு
-1938