பக்கம்:பாரதித் தமிழ்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பாரதி தமிழ்

7. மேத்தா திலகருக்குச் சொல்வது

8. லாஜபத்ராய் துதி

9. லாஜபத்ராய் பிரலாபம் 10. தாதாபாய் நவுரோஜி 11. பூபேந்திர விஜயம் 12. சுதந்திர பெருமை 13. மாஜியின் பிரதிக்கின 14. புதுவருஷம்

1907-1908-ல் பாரதியார் எழுதி வெளியிட்ட வேறு நூல்களாவன. “பூரீதிலகர் 1907-ஆம் வருஷத் தில் புதிய ககதியைத் தழுவிப் பிரசங்கங்கள் செய்ய, அதில் முதல் பிரசங்கத்தைப் புதிய கடசியின் கோட் பாடுகள் என்ற பெயருடன் நூல்வடிவமாக ஆங்கில மும் தமிழுமாய் ஒரு அணு விலையில் வெளியிட்டார். * * * * * * * சூரத்தில் நடந்த காங்கிரசுக்குப் பாரதியாரும் சென்றிருந்தார். சூரத்தில் காங்கிரஸ் பிளவுபட்டது. பாரதியார் தாம் சென்னையிலிருந்து பிரயாணப் பட்டது முதல் மறுபடியும் சென்னை வந்து சேர்ந்த வரையில் நடந்த விஷயங்களைக் கோவையாகத் தொகுத்து இந்தியா பத்திரிகையில் வெளியிட்டு எங்கள் காங்கிரஸ் யாத்திாை என்று ஒரு புத்தகமாக வும் இரண்டண விலையில் பிரசுரம் செய்தார். ஒவ் வொன்றும் புதுச்சுவை, புது நடை, புதிய அழகு கொண்டு இலங்கின.” (திரு. எஸ். ஜி. இராமநுஜலு நாயுடு-சென்று போன நாட்கள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/125&oldid=605380" இலிருந்து மீள்விக்கப்பட்டது