பக்கம்:பாரதித் தமிழ்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிச்சடி I45

அங்கே பழையவரும் புதியவருமாகிய இங்கிலீஷ் பண்டிதரின் வசனங்களை அடிக்கடி மேற்கொள் காட்டிப் பேசினர்கள். திருஷ்டாந்தமாக:

“ஸ்வதந்திரமே மனிதரை ஸ்வதந்திரத்திற்குத் தகுதியாக்குகிறது’ (அதாவது நீரிலே இறங்கித் தான் ஒருவன் நீச்சுப் படிக்க முடியும்; இல்லா விட்டால் முடியாது என்பதுபோல).

இந்த வாக்கியம் மகா கீர்த்தியுடன் நெடுங் காலம் இங்கிலாந்தில் முதல் மந்திரியாக இருந்த க்ளாட்ஸ்டன் என்பவர் சொல்லியது. நல்ல ராஜ் யத்தைக் காட்டிலும் ஸ்வராஜ்யம் நல்லது; இது கூறிய பானர்மான் என்பவரும் இங்கிலீஷ் முதல் மந்திரி ஸ்தானம் வகித்தவரேயாம். ஸம்ஸ்கிருதம் முதலிய புராதன பாஷைகள் படித்த வைதிகப் பண்டிதர்களைப் போலவே, நமது தேசத்தில் இங்கி லீஷ் படித்த வித்வான்களும் பெரும்பான்மையாகப் புத்தகப் பழக்கம் அதிகமாகவும் லெளகிகப் பழக்கம் குறைவாகவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் நாளடைவில் சீர்படுமென்று நம்புகிறேன்.

ஒகோ! இந்த மேற்கோள் சங்கதி எடுத்ததி லிருந்து என்னையும் இன்று அந்தக் குணம் பலமாகப் பிடித்துக் கொண்டது.

லார்ட் ஹால்டேன் என்று ஒரு இங்கிலீஷ் மந்திரி இப்போது பென்ஷன் வாங்கிக் கொண் டிருக்கிறார். இவர் நல்ல மேதாவி. இவர் சொல்லு கிறார்:

“இந்த யுத்தம் முடிந்தவுடனே ஜனதிகாரம் வந்து நம் முன்னே நிற்கும் (அதாவது பொது ஜனங்கள் கையிலே அதிகாரம் வந்து தங்கும்). நம் முடைய யஜமான்கள் பொது ஜனங்கள் நம் மீது

பா. த.-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/144&oldid=605409" இலிருந்து மீள்விக்கப்பட்டது