184 பாரதி தமிழ்
“பேயில்லை’ என்று மறுபடி சொன்னேன்.
“புதுப் பேய்” என்றாள்.
யான் : என்ன வேண்டும்?
அவள் : விளக்கு.
யான் : என்ன விளக்கு?
அவள் : நெய் விளக்கு.
யான் : என்ன நெய்?
அவள் : புலி நெய்.
யான் : எங்கே கிடைக்கும்?
அவள் . காட்டிலே.
யான் : எந்தக் காட்டிலே?
அவள் : பொதியமலைக் காட்டிலே.
எனக்குக் கோபம் வந்துவிட்டது.
காந்திமதி, உனக்குப் புத்தி சரியில்லை. நான் மந்திரத்தால் உன்னைக் குணப்படுத்தப் போகிறேன். கொஞ்ச நேரம் பேசாமலிரு. பேசினால் இந்தப் பிரம்பாலே அடிப்பேன்’ எ ன் று பயமுறுத் தினேன். ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து என் கையிலிருந்த பிரம்பைப் பிடுங்கி முறித்தெறிந்து விட்டாள்.
பிறகு மறுபடியும் அலறத் தொடங்கிள்ை:
‘நெய், நெய், நெய் கொண்டுவா. நட, நட. தூங்காதே, எழுந்திரு. நான் புதுப் பேய். எல் லோரும் நெய் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பெண்ணை மிகவும் கஷ்டப்படுத்துவேன்’ என்றாள்.