பக்கம்:பாரதித் தமிழ்.pdf/191

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 பாரதி தமிழ்

“மஹான்கள் கவிகளாயினும், சாஸ்திரக்கார ராயினும், வேறு எவ்வ்கையிலே தேசத்துக்கு உப காரம் செய்திருந்தபோதிலும், அவருடைய ஜன்ம தினத்தைக் கொண்டாடி சபைகள் நடத்தி, ஆராய்ச் சிகள் செய்வது தேசத்தின் அறிவு வளர்ச்சிக்குப் பெருந்துணையாகும்.”

கவி என்ற கட்டுரையிலே திருவள்ளுவர், இளங்கோ என்பவர்களைப்பற்றி அவர்கள் பிறந்த ஊர், அவர்கள் ஜன்ம தினத்தைக் கண்டறிய வழி ஆகிய விஷயங்கள் பேசப்படுகின்றன. ஆனல் கம்ப ரைப்பற்றி இவ்விதக் குறிப்புக் காணப்பெறவில்லை. அது சில கவியாசர் என்ற கட்டுரையிலே திருவள்ளு வரைப் பற்றிய குறிப்புக்குப் பின் கீழ்க்கண்டவாறு ஒரு பத்தியாக உள்ளது.

“கம்பநாடர் மாயவரத்துக்கு ஸ்மீபத்திலுள்ள திருவெழுந்துாரில் பிறந்தவர். அந்த ஊரிலே அவ ருக்கு ஞாபகச் சின்னம் ஏற்படுத்த வேண்டுமென்று சில வருஷங்களின் முன்பு ஒருவர் முயற்சி செய்தார். ஊக்க மில்லாமையால் அம்முயற்சி நிறைவேற வில்லை. கம்பனுடைய ஜன்ம திதி நிச்சயமாகத் தெரியவில்லை.”