226 பாரதி தமிழ்
வெளியே என்ன நடக்கிறதென்று சாளரத்தைத் திறந்தால் மழை நீர் சரேலென்று வெள்ளமாக உள்ளே பாய்கிறது. ஒன்றும் கண்ணுக்குத் தெரிய வில்லை. ஒரே பேரிருள். திறந்த சாளரத்தை மூடுவது பிரமப் பிரயத்தனம்.
காலைப் பொழுது
கார்த்திகை மாதம் 9-ம் தேதி வியாழக்கிழமை நல்ல பொழுது விடிந்தது. புயற்காற்று நின்றது.
ஊர்க்காரர் வெளியேறி வீதிக்கு வந்தார்கள். புதுச்சேரிப் பட்டனத்தை நேற்றுப் பார்த்த கண் ணுக்கு இன்று அடையாளம் தெரிய இடம் இல்லை: தெருவெல்லாம் ஒடிந்த மரங்கள். தென்னயும் பூவரசும் வீதிகளில் அதிகம். நூற்றில் எண்பது முறிந்து கிடந்தன. ஒடுகளும், மாடங்களும், கூரை களும் சேதப்படாத வீடு நான் ஒன்றுகூடப் பார்க்க வில்லை. சில கூரைகள் நெடுந்துாரம் தள்ளி விழுந்து கிடந்தன. காலையிலே தபால் வரவில்லை. தந்திக் கம்பிகளும் காந்த விளக்குக் கம்பிகளும் அறுந்து போய்விட்டன. காந்த விளக்குத் தொழிற்சாலையின் தலை விழுந்துவிட்டது. சுற்று வீதியில் ஏழைக் குடிசைகள் அழிந்து போய்விட்டன. உயிர்ச் சேதமும் நிகழ்ந்திருக்கிறது. தொகை தெரியவில்லை........
இதுவரை கிடைத்த தகவல் :
முத்தியால் பேட்டையில் 6000 வீடு நெசவு காரருண்டு. அனேகமாக அத்தனை வீட்டிலும் தறி, சாமான் எல்லாம் சேதம். பெரும்பாலும் வீடுகளே சேதம். மொத்த நஷ்டம் கணக்கிட முடியவில்லை. ஜனச் சேதம் அதிகமில்லை.
பாக்கமுடையான் பேட்டையில் கிராமத்தில் பெரும்பகுதி அழிந்து போய்விட்டது. ஜனச் சேதம் அதிகம்.