பக்கம்:பாரதித் தமிழ்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாதாபாய் கெளரோஜி 285

பல வருஷங்கள் கடந்தன. இன்று தாதாபாய் நெளரோஜியை உயிர் பெற்ற ஹிந்துஸ்தானம் ஆசாரிய ஸ்தானத்தில் கொண்டாடி ஊரூராகப் புகழ்ச்சி பேசுவதைக் காணும்போது ஜி. சுப்ர மண்ய அய்யர் போட்ட மதிப்பு சரியென்று விளங்கு கிறது. வைஸ்ராய்களும் கவனர்களும் இப்போது நெளரோஜிக்குப் பெருமை சொல்லுகிறார்கள். உயிரோடிருக்கும்போதே அவரை ராஜாங்கத்தார் மிகவும் மேன்மைபடுத்தி உபசரிக்கத் தொடங்கி விட்டார்கள். ஸ்வராஜ்யக் கொள்கைக்கு மேன்மை யும் வெற்றியும் உண்டென்பதை தாதாபாய் பல விதங்களிலே காண்பித்தார்.

தாதாபாய் நெளரோஜியினுடைய விண்ணப்ப உபாயம் நமக்குக் கைகூடி வருமோ என்பது ஒரு சந்தேகம். நாமே பல விண்ணப்பங்கள் ராஜாங்கத் தாருக்கு எழுதிப் பயனே இதுவரை பெருமல் இன்றும் எதிர்பார்த்த நிலைமையில் இருக்கிருேம். நம்முடைய விண்ணப்பங்களே அதிகாரிகள் உடனுக் குடனே கவனித்தால் நமக்கும் நல்லது; அவர்களுக் கும் நல்லது. ஜனங்களுக்குள்ளே அதிருப்தி பரவாமல் நம்முடைய நோக்கம் நிறைவேறும். தாதாபாய் போன்ற ஸ்வராஜ்யத் தலைவர்களிடம் அதிகாரிகள் நேருக்கு நேராக மந்திராலோசனை செய்தால் நல்லது. நம்மிடத்திலே தோன்றி யிருக்கும் புதிய சக்தியை அதிகாரிகள் கண் திறந்து பார்க்காமல் புறக்கணித்திருப்பது தந்திர சாஸ்திரக் துக்குப் பொருந்திய செய்கையன்று.

தாதாபாய் தெய்வ பக்தியுடையவர். அதனலே

தான் நான் அவருக்கு டிெ புகழ்ச்சியுரை எழுதத் துணிந்தேன். ராஜ்ய விஷயங்களிலே கலந்து காங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/284&oldid=605630" இலிருந்து மீள்விக்கப்பட்டது