பக்கம்:பாரதித் தமிழ்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்தாமணி 333

தாம். தேவ ரம்பையைப்போல் அழகாம் அந்தப் பெண்’ என்றாள்.

“அப்படிப்பட்ட அழகான பணக்கார இடத்துப் பெண்ணை இளையாளாகக் கொடுக்கக் காரண மென்ன?’ என்று பாட்டி கேட்டாள். அந்தப் பெண் திரண்டு மூன்று வருஷங்களாய் விட்டன. தாயும் இறந்து போய் விட்டாள். அதன் நடையுடை பாவனைகளெல்லாம் ஐரோப்பியமாதிரி. ஆதலால் இதுவரை அதற்குக் கலியாணத்துக்கு யாரும் வர வில்லை. எங்கப்பா அந்த ருதுவான வார்த்தையெல் லாம் வீண் பொய்யென்று சொல்லித் தாம் கல்யா ணம் பண்ணிக்கொள்ள ஸம்மதப்பட்டு விட்டார். மேலும் இவருக்கு மனதுக்குள்ளே ஸ்ந்தோஷந்தான், தமக்கு ருதுவான பெண் கிடைப்பதுபற்றி. இன் றைக்குக் காலையிலேகூட அவரும் எங்கம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் இந்த ஊர்ச் சத்திரத்திலேதான் ஒரு வாரமாக இறங்கி யிருக் கிருேம். எங்கப்பாவும் அம்மாவும் பேசிக்கொண் டிருந்தபோது அம்மா சொன்னுள்:-"மன்னர் குடிப் பெண் திரண்டு மூன்று வருஷமாய் விட்டதாக இந்த ஊரிலே கூடப் பலமான ப்ரஸ்தாபம். ஆண், பெண் எல்லோரும் ஒரே வாக்காகச் சொல்லுகிரு.ர்கள்’ என்றாள். அப்பா அதற்கு:-"நெவர் மைண்ட். அந்தக் குட்டி திரண்டிருப்பதைப் பற்றி நமக்கு இரட்டை ஸ்ந்தோஷம். நமக்குப் பணம் கிடைக் கும். ஆண் பிள்ளை பிறக்கும். குட்டி ஏராளமான அழகு. இந்த மாதிரி இடத்திலே ஐ டோன் கேர் எடேம் எபெளட் சாஸ்த்ரங்கள். நாம் சாஸ்திரங் களைப் புல்லாக மதிக்கிருேம் என்றார்....’ என்று காந்தாமணி சொன்னுள்.

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிற சத்தம் என் காதில் விழுந்தது. என்னுடைய பார்வை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/332&oldid=605706" இலிருந்து மீள்விக்கப்பட்டது