பக்கம்:பாரதித் தமிழ்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரஸ்த் திரட்டு 357

‘ மீ தெழும் மொக்குளன்ன யாக்கையை விடுவ தல்லால்

சீதையை விடுவதுண்டேன், இருபது திண்தோன்

உண்டா(க)?”

(நீர் மீதெழும் குமிழி போன்ற இந்த சரீரத்தை விட்டாலும் விடுவேனேயல்லாமல், என் உறுதியான தோள் இருபது மிருக்கையிலே, நான் ஸிதையை விடுவேனென்று நினைக்கவுஞ் செய்யலாமோ?)

என்று ராவணன் சொல்லியதாகக் கம்பர் எழுதி யிருக்கிற வரிகள் எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றன. ராவணனுடைய கதி மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜுக்கும் வரக் கூடாதென்று நான் மனப்பூர்வமாகக் கடவுளே வேண்டுகிறேன். ஐர்லாந்து தன் கடற் படையையும் நிலப் படையையும் தன் இஷ்டப்படி சமைத்து நடத்துவதென்ற அம்சம் சேர்ந்த எந்த ஏற்பாட் டையும் ப்ரிடிஷ் கவர்ன்மெண்டார் எந்தக் காலத் திலும் ஒப்புக்கொள்ள முடியாதென்று மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் தெரிவிக்கிறார். இந்த விஷயத்தை ஐயந்திரிபற, மிகத் தெளிவாக, எல்லோரும் உணரும் படி அழுத்திச் சொல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவிக்கிறார். எந்தக் காலத்துக்குமா? அதாவது, யுகாந்தம் வரைக்குமா? உலக முடிவு வரை, எப் போதுமே, ஐர்லாந்துக்குத் தன் இஷ்டப்படி படை சமைத்துப் பராமரிப்பதாகிய, மற்றக் குடியேற்ற நாடுகளுக்குள்ள, உரிமை கிடைக்கக் கூடாதென்று மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் சொல்லுவது எனக்கு ஒரு பக்கத்தில் வருத்தத்தையும் மற்றாெரு பக்கத்தில் நகைப்பையும் விளைவிக்கிறது. விரைவில் ஐர்லாந் தின் விஷயத்துக்கு ஒரு முடிவேற்பட வ்ழியில்லாம லிருப்பது பற்றி வருத்தமும், இப்படிப்பட்ட மந்திரிகள் வசம் இங்கிலாந்து அகப்பட்டுக்கொண்டு தாழ்வடைகிறதென்று வருத்தமும், மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் உலக முடிவுரை ஐர்லாந்தை அடிம்ைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/356&oldid=605742" இலிருந்து மீள்விக்கப்பட்டது