பக்கம்:பாரதித் தமிழ்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 பாரதி தமிழ்

பிறப்பித்து விட்டார்களென்று ஸ்மீபத்தில் வந்த லண்டன் தந்தியொன்றில்ை விளங்குகிறது. இது போலவே, மெஸ்படோமியாவில் ப்ரிடிஷரால் அமைக்கப்பட்டு வரும் அராபிய ஆட்சியின் வசம் அந்நாட்டை ஒப்புவிப்பதாகிய நோக்கத்துடன் அங்குள்ள இந்திய, பிரிடிஷ் லைந்யங்களையும் மிகவும் குறைத்து விடும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருப்ப தாகத் தெரிகிறது. சிறிது காலத்தின் முன்பு வட மேற்குப் பார்ஸிகத்திலிருந்து போல்ஷ்விக்கரைத் துரத்தும் பொருட்டாக ப்ரிடிஷ் படைகள் لاع யோகப்படுத்தப் பட்டனவென்று இந்தியா கவான மெண்டார் வெளியிட்ட அ றி க் ைக யி லி ரு ந் து லண்டன் டைம்ஸ்” முதலிய ஆங்கிலப் பத்திரிகை களுக்குக் கோபமூண்டு அவை ப்ரிடிஷ் கவர்ன்மெண் டாரைக் கண்டித்தெழுதுகின்றன. அந்த அறிக்கை உண்மையா, பொய்யா? பொய்யானல் அதன் உடனே ப்ரிடிஷ் க வர் ன் .ெ ம ண் டார் மறுக்க வேண்டும். அத்னை வெளியிட்டது பற்றி இந்தியா கவர்ன்மெண்டாரைக் கண்டிக்கவும் வேண்டும்” என்று லண்டன் டைம்ஸ்’ சொல்லுகிறது. எது எப்படியாயினும், பாரnகத்திற்கு இவ்விஷயம் பெரியதோர் நிவர்த்தியாகவே கருதத் தக்கது. ஆரம்பத்தில் இதல்ை பாரnகத்துக்கு அன்னியர் குளிடமிருந்து இடையூறுகளும், கஷ்டங்களும் நேரிடலாம். என்னும், காலக்கிரமத்தில், இதி னின்றும் பாரnகத்துக்கு வயிற்றுப் பூச்சி வெளி யேறியதால் மனிதனுக்கு நலமேற்படுதல் போல முற்றிலும் நன்மைதானேற்படுமென்பது எனக்கு

நிச்சயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/363&oldid=605754" இலிருந்து மீள்விக்கப்பட்டது