பக்கம்:பாரதித் தமிழ்.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்தியாவின் அழைப்பு 499

தாயே, நின்றன் பண்டைத் தநயராம் மாயக் கண்ணன், புத்தன், வலிய சீர் இராமனும், ஆங்கொரு மஹமது மினையுற்ற விராவுபுகழ் வீரரை வேண்டுதும் இந்நாள் ! ‘'தோன்றினேன்’ என்று சொல்லி வந்தருளும் சான்றாேன் ஒருமுனி தருகநீ எமக்கே ! மோசே, கிறிஸ்து, நானக் முதலியோர் மாசற வணங்கி மக்கள் போற்றிடத் தவித்திடுந் திறத்தினர் தமைப் போலின்றாெரு பவித்திர மகனைப் பயந்தருள் புரிகநீ ! எம்முன் வந்து நீதியின் இயலைச் செம்மையுற விளக்குமொரு சேவகன அருளுக நீ!

உத்தரம்

கேள்! விடை கூறினள் மாதா! நம்மிடை யாவனே யிங்கு தோன்றினன்? இவன் யார்? உலகப் புரட்டர் தந்திர உரையெலாம் விலகத் தாய்சொல் விதியினேக் காட்டுவான். மலைவு செய்யாமை: மனப்பகை யின்மை : நலிவுறுத்தோரை நாம் எதிர்த்திடாமை : தீச்செயல் செய்யும் அரசினேச் சேராமை; ஆச்சரியப்பட உரைத்தனன் -அவையெலாம். வருக காந்தி ! ஆசியா வாழ்வே ! தரும விதிதான் தழைத்திட உழைப்பாய். ஆன்மா அதனல் ஜீவனை யாண்டு மேனெறிப் படுத்தும் விதத்தினை யருளிய்ை! பாரத நாட்டின் பழம்பெருங் கடவுளர் வீரவான் கொடியை விரித்து நீ நிறுத்திய்ை ! மானுடர் தம்மை வருத்திடும் தடைகள் ஆனவை யுருகி அழிந்திடும் வண்ணம் உளத்தினை நீ கனல் உறுத்துவாய் ! எங்கள் காந்தி மஹாத்மா நின்பாற் கண்டனம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/498&oldid=605963" இலிருந்து மீள்விக்கப்பட்டது