பக்கம்:பாரதித் தமிழ்.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு கோடி ரூபாய் 509

ஸைந்யச் செலவுக்கு உபயோகப்படுத்துவதென்ற ஆலோசனைக்கு இடமில்லை. எனவே, ப்ரசாரத் தொழில் ஒன்றுதான் கதி. மேற்படி தொகையில் ஒரு பகுதிக்கு ராட்டினங்கள் வாங்கி ஜனங்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று கருதினால் அங்வனம் தாராளமாகச் செய்யலாம். வேறு எத்தனை வகை களில் செலவு செய்ய விரும்பினலும் செய்யலாம். ஆனல் அத்தனைக்கும் ஆதாரமான மூலவழி ப்ரசாரந் தான் என்பதை மறந்துவிடக்கூடாது.

ஏற்கெனவே, ப்ரசாரத்தில் இத் தொகையை எங்ஙனம் செலவு செய்யலாமென்பதைக் குறித்துச் சில வழிகள் இப்பத்திரிகையிலே குறிப்பிட்டிருக் கிறேன். ஜில்லாவுக்கு 4 பேருக்குக் குறையாமல் மஹா நிபுணரான ஸ்வதேசீய ப்ரசாரகர் ஏற்பட வேண்டும்.

ஆனல், ப்ரசாரத் தொழில் இதுவரை தொடக்க முருமல் இருப்பதன் காரணம் யாதென்பது துலங்க

ல்

இந்த விஷயத்தைக் குறித்துச் சென்னை மாகா ணத்தில் வசூல் தொழிலை முக்கியஸ்தராக இருந்து நடத்திய என் நண்பர் சேலம் பூரீ ராஜகோபாலாசார் யரும் பிறரும் பூரீமான் மஹாத்மா காந்திக் கெழுதி வேண்டியன செய்வார்களென்று நம்புகிறேன்.

மற்றபடியுள்ள காங்க்ரஸ் ஸங்கங்களின் அங்கத் தினராலும் அனுதாபிகளாலும் மிகவும் சிரமப்பட்டு வசூல்செய்யப்பட்டமேற்படி தொகை வீணாய்விடாத படி கவனிக்க வேண்டும். உலக சரித்திரத்தில் இந்த சந்தர்ப்பம் மிக முக்யமானது. இதில் உல்க முழுமை யிலும் பல அற்புதமான மாறுதல்கள் தோன்றி வருவது மாத்திரமேயன்றி, உலகத்திலுள்ள தேசங் களுக்கெல்லாம் விடுதலை பொதுவாகி விடுமென்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/508&oldid=605980" இலிருந்து மீள்விக்கப்பட்டது