பக்கம்:பாரதித் தமிழ்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

பாரதி தழிழ்


 “இந்தியா பத்திரிகை வரவரக் 'கார'மாகிவிட்டது. சிவாஜி தன் சைநியத்தாருக்குக் கூறியது என்று அகவல் ரூபமாய் பாஞ்சாலி சபதம் போல் பெருங் காவியமாகத் தொடர்ச்சியாய்ப் பத்திரிகையில் எழுதி வந்தார். அது முற்றும் வீர ரஸமாய்இருந்தது. அதனைத் தனிப் புத்தக உருவமாய் வெளியிடுவதற்குப் பாரதியார் விரும்பினர். அது ஆபத்தென நண்பர்களால் தடுக்கப்பட்டது. இந்தியா பத்திரிகைக்குப் பாரதியார் அந்தரங்கத்தில் ஆசிரியராக இருந்தாரேயன்றி வெளிப்படையாய் அன்று. ஸ்ரீ  ஸ்ரீநிவாசன் என்பவர் ஆசிரியரும் பிரசுரிப்பவருமென்று பத்திரிகைகளில் வெளி வந்துகொண்டிருந்தது. பாரதியார் ஒரு நிருப நேயர் போன்று இந்தியா பத்திரிகையில் ப்ாடல்களை மட்டும் தமது பெயருடன் வெளியிட்டு வந்தார்.

‘அவ்வப்போது நடந்தேறிய சம்பவங்களுக்கெல்லாம் சிறு சிறு பாடல்களை இந்தியா பத்திரிகையில் தமது பெயருடன் வெளியிடுவதானர். வந்தேமாதர கீதத்திற்கு, இனிய நீர்ப் பெருக்கினை இன்கனிவளத்தினை’ என்று தமிழ் மொழி பெயர்ப்பு ஒன்றும் வெளியிட்டார். அப்பாடல்களின் மூலமாக மட்டும் அவர் பெயரைத் தமிழ் நாட்டினர் அறிந்துவந்தனர்.

‘இந்தியா பத்திரிகைக்குப் பாரதி ஆசிரியரென்று எவருமே அறியார். பாரதியாருக்குத் தமிழ் நாட்டிலிருந்த பெயர் இவ்வளவுதான். சென்னையிலுள்ளார் மட்டும், அதிலும் சில முச்சியஸ்தர்கள் மட்டும் உண்மையை உணர்ந்திருந்தனர். தமது பாடல்களையெல்லாம் ஒன்று சேர்த்து ஸ்வதேச கீதங்கள் என்று இரண்டணு விலையில் ஒரு புத்தகமாக வெளியிட்டார். அதைக் குறித்து இந்தியா பத்திரிகையில், 'சுப்பிரமணிய

பாரதியாரின்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/74&oldid=1539801" இலிருந்து மீள்விக்கப்பட்டது