பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 சொட்டுகிறது. காந்தாமணி, காந்தாமணி. என்ன நேர்த்தி யான நாமம். ரஸம் ஒழுகுகிறது...” இங்ங்னம் ஸுந்தர சாஸ்திரி காந்தாமணியை வர்ணித்துக்கொண்டு போவதை நான் இ ைட யே மறித்து :-மேலே நடந்த சரித்திரத்தைச் சொல்லும்' என்றேன். "அந்தக் காந்தாமணியைக் காணவில்லையென்று விடியற்காலமெல்லாம் தே டி க் கொண்டிருந்தார்கள். இப்போதுதான் அம்பாசமுத்திரத்திலிருந்து ஒரு தந்தி கிடைத்ததாம். இன்று பகல் 3 மணிக்கு மேற்படி காந்தாமணியும், ஒரு மலையாளிப் பையனும் கிறிஸ்துவக் கோவிலில் விவாகம் செய்து கொண்டார்களென்று அந்தத் தந்தி சொல்லுகிறதாம் என்ருர். சில தினங்களுக்கப்பால் மற்ருெரு ஆச்சர்யம் நடந்தது. கிராமத்து மாஜி போலீஸ் சேவகர் நரைத்த தலைப் பார்த்தஸாரதி அய்யங்காரும், அன்று கிணற்றங் கரையில் அவருடைய காதற்பார்வைக் கிலக்காயிருந்த கிழவியும் ரங்கூனுக்கு ஒடிப் போய்விட்டார்கள். பின்னிட்டு அந்தக் கிழவி தலை வளர்த்துக் கொண்டு விட்டாளென்றும் பார்த்தஸ்ாரதி ஐயங்காரும் அ வ ளு ம் புருஷனும் பெண் ஜாதியுமாக வாழ்கிருர்களென்றும், அய்யங்கார் அங்கொரு நாட்டுக்கோட்டை செட்டியிடம் வேலை பார்த்துத் தக்க சம்பளம் வாங்கிக்கொண்டு rேமமாக வாழ்கிருர்களென்றும் ர ங் கூ னி லி ரு ந் து செய்தி கிடைத்தது. பிராயச்சித்தம் திரைகடல் ஒடியும் திரவியம் தேடு என்பது தமிழ் பழமொழி. முந்நாளில் கடல் வாணிகம் செய்து நிறையப்