பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 அவரைப் ப்ராயச்சித்தம் செய்து கொள்ளும்படி சொன்கு கள். அவர் பண்ணிக்கொள்ளவில்லை. ஆனல் இங்கு வந்த பிறகு சுத்தமான பிராமணர் சமையல்தான் சாப்பிடி கிருர். பிராமண ஆகாரம் அவருக்கு நன்ருக ஒத; வருகிறது. உடம்புக்கு ஒன்றும் செய்வதில்லை. மற நடைகளும் அப்படியேதான். மூன்று வேளையும் ஸந்த்யா வந்தனம்; மாத்யான்ஹிகங்கள் தவறுவதில்லை. அமாவாசை தோறும் சரியான தர்ப்பணம்; வருஷத்தில் ஐந்தார் சிராத்தம் எல்லாம் கிரமமாகவே நடத்தி வருகிருர். ஒரே ஒரு புரோஹிதரும் அனேக லெளகிகரும் இவரை ஜாதியி: சேர்த்துக்கொண்ட மாதிரியாகவே நடந்து வருகிருர்கள், பல புரோஹிதரும், சில லெளகிகரும் கொஞ்சம் ஒட்டியம் ஒட்டாமலும், தாமரை நீர் போலிருக்கிருர்கள். சிவு ஒட்டாமலே விலகியிருக்கிருர்கள். போன மாஸம் மேற்படி ராமராயர் என்னிடம் ஊர்க்காரருடைய திருப்தியை உத்தேசித்துத்தான் ப்ராயச்சித்தம் பண்ணிக்கொள்ள இஷ்டப்படுவதாக அறிவித்தார். நான் உடனே மேற்படி விஷயத்தை இந்த ஊர் வைதிகர்களுக்கெல்லர்! சிரோமணியாகிய ரங்கநாத சாஸ்திரிகளிடம் போய்! சொன்னேன். இந்த ரங்கநாத சாஸ்திரிகளுடைய மாப்பிள்ளை ஒருவன் ரங்கூனிலே போய்க் காபிக் கடை வைத்திருக்கிருன். தமிழ்த் தேங்குழல், தமிழ் முறுக்கு தோசை, வடை, கடலைச் சுண்டல் முதலிய பசுணங்களே! கொஞ்சமேனும் வடஇந்தியா ஆரிய சம்பந்தமில்லாதப் ந ன் மு. க ப் பண்ணிக்கொடுத்து, அங்குள்ள தமி) மக்களெல்லாம், இந்த பிராமணனை மிகவும் அருமையாகப் பாராட்டினபடியால் நல்ல பணக்காரளுகி, அங்கே தனது மனைவியாகிய மேற்படி சாஸ்திரிகளுடைய பெண்ணும் தானும் நாலைந்து குழந்தைகளுமாக செளக்கியத்தோடு வாழ்ந்து வருகிருன். இந்தக் காரணத்தை யொட்!