பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 றில்லை. ப்ரஹ்மாண்ட புராணத்தில் நான் ஒரு சுலோகம் படித்தேன். அது இப்போது ஞாபகமில்லை. அதிலே என்ன போட்டிருக்கிறதென்ருல், கலியுகத்திலேயே ஒரு கிருதயுகம் வரும் என்று போட்டிருக்கிறது. கலி முற்றி உலகம் நாச மாய்ப் போகுமென்றே வாக்யங்களே நான் சோதனை போட்டுப் பார்த்திருக்கிறேன். அவற்றை யெல்லாம் காட்டிலும், மேற்படி ப்ரஹ்மாண்ட புராண வாக்யமே ப்ரமாணமென்று நான் நிச்சயமாக ருஜுப்படுத் துவேன். தாளிதாஸ்ரே, நீரும் அதை நம்பும். இதெல்லாம் ஏன் சொல்லுகிறனென்ருல் உம்முடைய ஸ்நேகிதர் ராமராயர் ப்ராய்ச்சித்தம் பண்ணிக் கொள்ளப் போகிறதாகச் சொன்னீரே? அது அவசியமில்லை. இன்னும் கொஞ்ச காலத்தில் கிருதயுகம் வந்து விடுமானல், அவருக்கு யாதொரு சிரமுமில்லை. எல்லாரும் ஸ்மானம். அட க்ருதயுகம் வரவேயில்லை; இந்தக் கலியுகமே சாசுவதமாக இருக்கப் போகிறதாக வைத்துக்கொள்வோம். அதிலும், அதிகமாகப் பொய் சொல்லாமல் இருப்பது விசேஷம். கலி தானகவே முற்றுவது போதாதென்று நாம் ஒரு பக்கம் அதைப் பொய்சொல்லிப் பழுக்க வைப்பதில் என்ன சுகம்? கடல் யாத்திரை பண்ணினல் என்ன குடி முழுகிப் போச்சு? ஏன் காணும், காளிதாஸ்ரே! உம்மைத்தான் கேட்கிறேன், கடல் யாத்திரை பண்ணிஞல் என்ன? இருக்கிற பிராமணர் ளெல்லாரும் ஸ்மிருதி வாக்யம் தவருதபடிதான் நடக் இருர்களோ? நம்முடைய மாப்பிள்ளை ரங்கூனுக்குப் போய் அங்கே நல்ல கோடீசுவரகை வாழ்கிருன். மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பங்களுர், திருச்சினப்பள்ளி, தஞ்சாவூர், புதுச்சேரி, கும்பகோணம் இத்யாதி rேத்ரங்களில் விக்கும் இங்கிலீஷ் பிராமணர்களுக்குள்ளே ஸந்த்யா இந்தனம் எவ்வளவும் சொற்பம்? தீர்த்த பானம் கூட நடக்கத்தான் செய்கிறது. ராம ராமா இந்த ரிஷிக tons.—7