உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109

பாரதியார் வாக்கு ஆழ்ந்து சிந்தித்தற்குரியது. இதன் விரிவை மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் என்னுடைய பாரதியும் பாட்டும் என்ற நூலைப் பார்க்கவும். கர்நாடக சங்கீதம் மங்கிவருவதை உணர்ந்தாவது, பாரதி யார் கருத்தை ஊன்றிப் பார்க்க வேண்டும். ஏனென்றால் கர்நாடக சங்கீதம் ஓர் ஒப்பற்ற கலை. இசைக்கெல்லாம் சிகரம். இது வீணாக ஆதரிப்பாரற்றுப் போகக்கூடாது.

உங்கள் சிவன் வழியே வருவதில்லை

நாராயண குரு பெரிய சமூக சீர்திருத்தவாதி. பல எதிர்ப்புக்களிடையே தீயர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர்.

ஒரு சமயம், ஒரு நம்பூதிரி பிராம்மணன், ரயில் பயணத்தின்போது, “நீதானா சிவபிரதிஷ்டை செய்கிறவன்?” என்று கோபத்தோடு கேட்டாராம்.

நாராயண குரு அமைதியாகவும் நகைச்சுவையோடும் பதில் சொன்னார்: “உங்கள் சிவனே வேறு; நான் அதைப் பிரதிஷ்டை செய்யவில்லை. எங்கள் சிவனே வேறு; அதைத் தான் பிரதிஷ்டை செய்கிறேன். உங்கள் சிவன் வழிக்கே நாங்கள் வருவதில்லை” என்றாராம்.

தீயர்களுடைய சிவன்

“இவர் கோயில்கள் கட்டினதைப்பற்றி இதர ஜாதியார் வருத்தப்படவில்லையா?” என்று வேதவல்லியம்மை கேட்டாள்.

“ஆம். அவர்களுக்குக் கோபம்தான். ஒரு நாள் இந்த நாராயணஸ்வாமி ரயில்யாத்திரை செய்கையில் இவர் ஏறியிருந்த வண்டியில் ஒரு நம்பூரி பிராமணர் வந்து