117
வஜ்ரஸூசீ உபநிஷத்து பின் வருமாறு:—
ஞானமற்றவர்களுக்குத் தூஷணமாகவும், ஞானக் கண்ணுடையவர்க்குப் பூஷணமாகவும் விளங்குவதும், அஞ் ஞானத்தை உடைப்பதுமாகிய“ "வஜ்ர ஸூசீ" ”என்ற சாஸ்திரத்தைக் கூறுகிறேன் :—
‘பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் உண்டு. அவற்றிலே, பிராமணன் பிரதான மானவன் என்று வேதவசனத்தைத் தழுவி ஸ்மிருதிகளாலும் சொல்லப்படுகிறது. அதில் பிராமணன் யாரென்பது பரிசோதிக்கத்தக்கதாகும். ஒருவன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக்கொள்ளுகிறான். அங்ஙனம் பிராமணன் என்பது அவனுடைய ஜீவனையா? தேகத் றதயா? பிறப்பையா? அறிவையா? செய்கையையா? தர்ம குணத்தையா? அவனுடைய ஜீவனே பிராமணனென்றால் அஃதன்று. முன் இறந்தனவும், இனி வருவனவும் இப்போ நள்ளனவும் ஆகிய உடல்களிலெல்லாம் ஜீவன் ஒரே ரூபமுடையதாயிருக்கின்றது. ஒருவனுக்கே செய்கை வசத்தால் அவ்வித உடல்கள் உண்டாகும்போது, எல்லா உடல்களிலும் ஜீவன் ஒரே ரூபமுடையதாகத் தான் இருக்கின்றது. ஆகையால், (அவனுடைய) ஜீவன் பிராமணனாக மாட்டாது. ஆயின், (அவனது) தேஹம் பிராமணனெனில் துவுமன்று, சண்டாளன் வரையுள்ள எல்லா மனிதர்களுக்கும் பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்ட உடலும் ஒரே மைப்புடையதாகத் தானிருக்கின்றது. மூப்பு, மரணம், பல்கள். இயலின்மைகள்- இவையனைத்தும் எல்லா ல்களிலும் சமமாகக் காணப்படுகின்றன. மேலும், மணன் வெள்ளை நிறமுடையவன், க்ஷத்திரியன் செந்நிறமுடையவன், வைசியன் மஞ்சள் நிறமுடையவன், சூத்திரன் கருமை நிறமுடையவன் என்பதாக ஓர் நியமத்-